கொரோனா தொற்றால் உயிரிழந்தவரை பாதி வழியிலேயே விட்டு சென்ற அம்புலன்ஸ் ஓட்டுநர்…! சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஆம்புலன்ஸ் ஓட்டுநர்….!

Published by
லீனா

கொரோனா தொற்றால் உயிரிழந்தவரை பாதி வழியிலேயே விட்டு சென்றதால் சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஆம்புலன்ஸ் ஓட்டுநர். 

ஆந்திரா, கிருஷ்ணா மாவட்டத்தைச் சேர்ந்த திருவுரு மண்டலத்தில் உள்ள முனுகுல்லா கிராமத்தில் வசிப்பவர் ஷேக் சுபானி (40), இரண்டு நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார். செவ்வாய்க்கிழமை காலை, அவர் கோவிட் பரிசோதனைக்காக ராஜுகுதேம் அரசு மருத்துவமனைக்குச் சென்றார்.  அவரது உடல்நிலை மிகவும் மோசமாகிய நிலையில், சுபானி மேல்சிகிச்சைக்காக ஆம்புலன்சில் அமராவதி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். மருத்துவமனையை அவர் அடைந்த நிலையில், அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்.

இதனையடுத்து அவரது மனைவி உடலை கிராமத்திற்கு கொண்டு செல்லாமல்,  ஆம்புலன்ஸ் டிரைவரிடம் உடலைக் கிராமத்தின் புறநகரில் விட்டுவிட்டு செல்லுமாறு கூறியுள்ளார். இதனையடுத்து அம்புலன்ஸ் ட்ரைவர் இறந்தவரின் மனைவி சொன்ன இடத்தில் விட்டு சென்றுள்ளனர்.  சடலம் சாலையில் சிறிது நேரம் இருந்துள்ளது.  இதனையடுத்து காவல்துறையினர் இது இந்த சம்பவம் தொடர்பாக அறிந்து இறுதிச் சடங்குகளுக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.

இந்நிலையில் இது தொடர்பாக ஆந்திர மாநில சுகாதாரத்துறை விளக்கம் அளித்துள்ளது. அதில் ‘மே 11, 2021 செவ்வாய்க்கிழமை கிருஷ்ணா மாவட்டத்தில்  ராஜுகுதேம் அரசு மருத்துவமனையில் இருந்து 40 வயது மதிக்கத்தக்க சுபானி என்பருக்கு, ஆக்சிஜன், படுக்கைகள் கிடைக்காததால், அமராவதி மருத்துவமனைக்கு 11:28 அளவில் ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டார். மருத்துவர்கள் அவரை பரிசோதித்ததில் அவர்கள் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

பின் நோயாளியின் மனைவி இறந்தவரை சாலையோர இடத்தில் இறக்கி விடுமாறு ஆம்புலன்ஸ் ஊழியரை கேட்டுக்கொண்டார். அவர்களின் ஆம்புலன்ஸ் ஊழியர் அவர்களை இறக்கிவிட்டனர். நோயாளியின் உறவினர்கள் ஒரு எழுத்துப்பூர்வ கடிதத்தை, இறந்தவரின் மனைவியின் ஒப்புதலுடன் அளித்துள்ளனர். அதில் தங்களின் வேண்டுகோளின் அடிப்படையில் தான், அந்த இடத்தில் இறக்கி விட்டதாகவும், 108 ஊழியர் எந்த தவறும் செய்யவில்லை என்றும் ஒப்புக் கொண்டார்கள்.’ என்று மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Published by
லீனா

Recent Posts

SA vs NZ : இறுதிவரை போராடிய தென் ஆப்பிரிக்கா! இறுதி போட்டிக்குள் நுழைந்த நியூசிலாந்து!

SA vs NZ : இறுதிவரை போராடிய தென் ஆப்பிரிக்கா! இறுதி போட்டிக்குள் நுழைந்த நியூசிலாந்து!

லாகூர் : சாம்பியன்ஸ் டிராபியின் இரண்டாவது அரையிறுதிப் போட்டி இன்று பாகிஸ்தானின் லாகூரில் நடைபெற்றது. தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள்…

2 hours ago

ப்ளூ கோஸ்ட்: விண்வெளியில் புதிய மைல்கல்… சிலிர்ப்பூட்டும் நிலாவின் மேற்பரப்பு காட்சிகள்.!

வாஷிங்டன் : அமெரிக்க தனியார் விண்வெளி நிறுவனமான ஃபயர்ஃபிளை ஏரோஸ்பேஸின் ப்ளூ கோஸ்ட் மிஷன் 1 கடந்த ஞாயிற்றுக்கிழமை (மார்ச்…

4 hours ago

தற்கொலை முயற்சி அல்ல.. மருத்துவமனையில் பாடகி கல்பனா.! மகள் சொன்ன அதிர்ச்சி தகவல்!

ஹைதராபாத் : தமிழ், தெலுங்கு உட்பட பல்வேறு மொழி திரைப்படங்களில் பின்னணிப் பாடகியாக வலம் வந்த கல்பனா அளவுக்கு அதிகமான…

5 hours ago

SA vs NZ : தென்னாப்பிரிக்காவை கதறவிட்ட வில்லியம்சன் – ரச்சின்! நியூசிலாந்து வைத்த இமாலய இலக்கு.!

லாகூர் : சாம்பியன்ஸ் டிராபி தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், நேற்று முதல் அரையிறுதி போட்டியில் ஆஸ்ரேலியா அணியை வீழ்த்தி…

5 hours ago

மீண்டும் மீண்டும் ரஜினியிடம் பாராட்டு! பிரதீப் காட்டில் மழைதான்!

சென்னை : பிரதீப் ரங்கநாதன் காட்டில் மழை தான் என்கிற வகையில், அவருடைய படங்கள் தொடர்ச்சியாக ஹிட் ஆகி கொண்டு வருகிறது.…

6 hours ago

பயணிகள் கவனத்திற்கு…தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்களின் சேவையில் மாற்றம் – தெற்கு ரயில்வே அறிவிப்பு.!

சென்னை : சென்னை கடற்கரை – எழும்பூர் இடையே புதிய வழித்தடம் அமைக்கும் பணி நடைபெற்று வருவதால், இதற்கு இடையிலான…

8 hours ago