கொரோனா நோயாளியை ஏற்றிச் செல்லும்போது விபத்தில் சிக்கிய ஆம்புலன்ஸ் – 3 பேர் உயிரிழப்பு!

Published by
Rebekal
  • கேரளாவில் கொரோனா நோயாளியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் பொழுது ஆம்புலன்ஸ் விபத்தில் சிக்கியுள்ளது.
  • இந்த விபத்தில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

கேரள மாநிலத்திலுள்ள கண்ணூரை அடுத்த சுண்டபாறை பகுதியை சேர்ந்த பிஜோய் எனும் 45 வயது நபர் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் இருந்த இவரது உடல்நிலை மோசமானதை அடுத்து, இவர் கண்ணூர் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலமாக அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். இந்நிலையில் இவரை ஏற்றி சென்ற பொழுது ஆம்புலன்சில் விஜய்யின் சகோதரி மற்றும் அவரது உறவுக்கார நபர் பொன்னி என்பவரும் இருந்துள்ளனர்.

ஆம்புலன்ஸை நித்திஷ் ராஜ் என்பவர் ஓட்டியுள்ளார். கண்ணூரில் இருந்து இளையாவூர் அருகே சென்றபோது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த ஆம்புலன்ஸ் சாலை ஓரம் இருந்த மரத்தில் வேகமாக மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதனையடுத்து இந்த விபத்தில் ஆம்புலன்ஸில் முன்பகுதி பலத்த சேதம் அடைந்து, அதன் ஓட்டுனர் உட்பட ஆம்புலன்சில் இருந்த நான்கு பேரும் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடியுள்ளனர்.

அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் விரைந்து வந்து பிறகு விபத்தில் சிக்கியவர்களை மீட்க முயற்சித்துள்ளனர். பின் தீயணைப்பு துறையினருக்கும் இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆம்புலன்ஸ் முன்புறம் மிகவும் நசுங்கியதால் கதவுகள் வெட்டி எடுத்து தான் உள்ளே இருந்தவர்கள் வெளியே கொண்டு வரப்பட்டுள்ளனர். அப்பொழுது கொரோனா நோயாளி பிஜோய் மற்றும் அவரது சகோதரி, டிரைவர் ஆகிய மூன்று பேரும் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.

அவரது உறவினர் பொன்னி என்பவர் மட்டும் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்துள்ளார். இதனையடுத்து அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். கொரோனா பாதிப்பு காரணமாக ஏற்பட்ட மூச்சுத்திணறலால் மருத்துவமனைக்கு செல்லும் பொழுது, ஆம்புலன்ஸ் விபத்தில் கொரோனா நோயாளி உட்பட 3 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Published by
Rebekal

Recent Posts

RCB vs GT : பந்துவீச்சில் மிரட்டிய குஜராத்! போராடி 170 டார்கெட் வைத்த பெங்களூரு! 

RCB vs GT : பந்துவீச்சில் மிரட்டிய குஜராத்! போராடி 170 டார்கெட் வைத்த பெங்களூரு!

பெங்களூரு : ஐபிஎல் தொடரில் இன்றைய ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் விளையாடி வருகின்றன.…

6 hours ago

RCB vs GT : இதுவா பெங்களூரு மைதானம்? கதறும் RCB வீரர்கள்.. அடுத்தடுத்த அவுட்!

பெங்களூரு : இன்றைய ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதுகின்றன. இதில்…

7 hours ago

RCB vs GT : இந்த முறை ‘கிங்’ ஆட்டம் மிஸ் ஆயிடுச்சி., குஜராத் சூழலில் வீழ்ந்த விராட் கோலி!

பெங்களூரு : இன்று (ஏப்ரல் 2) நடைபெறும் ஐபிஎல் 2025 போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், குஜராத் டைட்டன்ஸ்…

8 hours ago

இங்க நான் தான் கிங்.! எலான் மஸ்க் முதலிடம்! டாப் 5 உலக பணக்காரர் லிஸ்ட் இதோ..

ஜெர்சி சிட்டி : ஆண்டுதோறும் ஏப்ரல் 1ஆம் தேதியன்று ஃபோர்ப்ஸ் பத்திரிகையானது உலக பணக்காரர்களின் பட்டியலை வெளியிடும். அதன்படி நேற்று…

9 hours ago

”சேட்டன் வந்நல்லே… சேட்டை செய்ய வந்நல்லே” மீண்டும் கேப்டனாக களமிறங்கும் சஞ்சு சாம்சன்.!

பெங்களூரு : வரும் 5-ம் தேதி நடைபெறவுள்ள பஞ்சாப் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் இருந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின்…

10 hours ago

“வக்பு சொத்துகளை மத்திய அரசு அபகரிக்க நினைக்கிறது!” ஆ.ராசா கடும் தாக்கு!

டெல்லி : வக்பு வாரிய திருத்த சட்டமானது இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த சட்ட திருத்தத்தை மத்திய சிறுபான்மை…

10 hours ago