கொரோனா நோயாளியை ஏற்றிச் செல்லும்போது விபத்தில் சிக்கிய ஆம்புலன்ஸ் – 3 பேர் உயிரிழப்பு!

Published by
Rebekal
  • கேரளாவில் கொரோனா நோயாளியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் பொழுது ஆம்புலன்ஸ் விபத்தில் சிக்கியுள்ளது.
  • இந்த விபத்தில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

கேரள மாநிலத்திலுள்ள கண்ணூரை அடுத்த சுண்டபாறை பகுதியை சேர்ந்த பிஜோய் எனும் 45 வயது நபர் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் இருந்த இவரது உடல்நிலை மோசமானதை அடுத்து, இவர் கண்ணூர் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலமாக அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். இந்நிலையில் இவரை ஏற்றி சென்ற பொழுது ஆம்புலன்சில் விஜய்யின் சகோதரி மற்றும் அவரது உறவுக்கார நபர் பொன்னி என்பவரும் இருந்துள்ளனர்.

ஆம்புலன்ஸை நித்திஷ் ராஜ் என்பவர் ஓட்டியுள்ளார். கண்ணூரில் இருந்து இளையாவூர் அருகே சென்றபோது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த ஆம்புலன்ஸ் சாலை ஓரம் இருந்த மரத்தில் வேகமாக மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதனையடுத்து இந்த விபத்தில் ஆம்புலன்ஸில் முன்பகுதி பலத்த சேதம் அடைந்து, அதன் ஓட்டுனர் உட்பட ஆம்புலன்சில் இருந்த நான்கு பேரும் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடியுள்ளனர்.

அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் விரைந்து வந்து பிறகு விபத்தில் சிக்கியவர்களை மீட்க முயற்சித்துள்ளனர். பின் தீயணைப்பு துறையினருக்கும் இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆம்புலன்ஸ் முன்புறம் மிகவும் நசுங்கியதால் கதவுகள் வெட்டி எடுத்து தான் உள்ளே இருந்தவர்கள் வெளியே கொண்டு வரப்பட்டுள்ளனர். அப்பொழுது கொரோனா நோயாளி பிஜோய் மற்றும் அவரது சகோதரி, டிரைவர் ஆகிய மூன்று பேரும் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.

அவரது உறவினர் பொன்னி என்பவர் மட்டும் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்துள்ளார். இதனையடுத்து அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். கொரோனா பாதிப்பு காரணமாக ஏற்பட்ட மூச்சுத்திணறலால் மருத்துவமனைக்கு செல்லும் பொழுது, ஆம்புலன்ஸ் விபத்தில் கொரோனா நோயாளி உட்பட 3 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Published by
Rebekal

Recent Posts

எங்கும் பாலியல் கறைகள்! ‘கவலையின்றி அல்வாசாப்பிட்டு கொண்டிருக்கிறார் முதல்வர்’ – சீமான் ஆவேசம்!

எங்கும் பாலியல் கறைகள்! ‘கவலையின்றி அல்வாசாப்பிட்டு கொண்டிருக்கிறார் முதல்வர்’ – சீமான் ஆவேசம்!

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகேயுள்ள போச்சம்பள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வரும் மாணவியை அதே…

6 hours ago

டி20 உலகக்கோப்பையை வென்ற இந்தியா! வீரர்களுக்கு பிசிசிஐ கொடுத்த கிஃப்ட்!

டெல்லி : மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்ற 2024 டி20 உலகக் கோப்பையை இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய…

7 hours ago

மேலும் 487 இந்தியர்களை நாடுகடத்த அமெரிக்கா திட்டம்! விக்ரம் மிஸ்ரி சொன்ன தகவல்!

அமெரிக்கா : நாட்டில் சட்டவிரோதமாக குடியேறியதாக  104 இந்தியர்களை அமெரிக்க ராணுவ விமானம் மூலம் நாடு கடத்தப்பட்ட விஷயம் பெரிய…

8 hours ago

அடிமேல் அடி…லைக்காவுக்கு அதிர்ச்சி கொடுத்த விடாமுயற்சி! முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

சென்னை : விடாமுயற்சி திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பிப்ரவரி 6-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில், படம் கலவையான விமர்சனத்தை…

8 hours ago

இத்தனை நாளு எங்கய்யா இருந்த? ஸ்ரேயாஸ் ஐயரை புகழ்ந்து தள்ளிய ரிக்கி பாண்டிங்!

மகாராஷ்டிரா : இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி அசத்தலான வெற்றியை பதிவு செய்துள்ளது. …

9 hours ago

கந்தூரி விழா : காரைக்கால் மாவட்டத்திற்கு நாளை (08.02.2025) உள்ளூர் விடுமுறை!

புதுச்சேரி : காரைக்கால் கந்தூரி விழாவை முன்னிட்டு, அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை  என மாவட்ட புதுச்சேரி…

11 hours ago