பாபாசாகேப்பின் சிந்தனைகள் நமது அரசுக்கு உத்வேகமாக உள்ளன என்று பிரதமர் மோடி ட்வீட்.
அம்பேத்கரின் 132வது பிறந்தநாளையொட்டி டெல்லியில் அம்பேத்கர் நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், துணை குடியரசு தலைவர் வெங்கய்யா நாயுடு மற்றும் பிரதமர் மோடி உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர்.
அம்பேத்கரின் பிறந்தநாளையொட்டி பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்தியாவின் முன்னேற்றத்திற்கு அழியாத பங்களிப்பைச் செய்தவர் அம்பேத்கர். அவரது கனவுகளை நிறைவேற்றுவதற்கான உறுதிப்பாட்டை நாம் வலியுறுத்தும் நாள் இது. தாழ்த்தப்பட்டோர், ஒடுக்கப்பட்டோர் நலனுக்கான பாபாசாகேப்பின் சிந்தனைகள் நமது அரசுக்கு உத்வேகமாக உள்ளன. இதன் காரணமாகவே நமது திட்டங்கள் அனைத்தும் ஏழை எளிய மக்களை மனதில் கொண்டு செயல்படுத்தப்பட்டு சமூக நீதிக்கான பல அளவுகோல்களை வகுத்துள்ளோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
கேரளா : ஜெயிலர் 2 படத்தின் அறிவிப்பு வெளியானதிலிருந்து, அதன் ஒவ்வொரு அப்டேட்டையும் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். தற்போது,…
வாட்டிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் கத்தோலிக்க திருச்சபை போப் பிரான்சிஸ், தனது 88வது வயதில் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அவரது…
சென்னை : டாஸ்மாக்கில் தொகுப்பூதியத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு ரூ.2,000 ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று சட்டசபையில் அமைச்சர் செந்தில் பாலாஜி…
சென்னை : இந்தியாவில் IAS, IPS, IFS, IRS ஆகிய சிவில் சர்வீஸ் காலிப்பணியிடங்களுக்கான தேர்வுகள் கடந்த 2024 ஜூன்…
சென்னை : சாதி சான்றிதழ்களில் சாதியின் பெயர் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்று தமிழ்நாடு…
உதகை : ஊட்டியில் ஆளுநர் கூட்டும் துணைவேந்தர்கள் கூட்டம் ஏப்ரல் 25,26 தேதிகளில் நடைபெறும் பல்கலைக்கழகங்களின் வேந்தர் என குறிப்பிட்டு…