ஜூலை 21 முதல் அமர்நாத் யாத்திரை தொடக்கம்!

Default Image

ஜூலை 21 முதல் அமர்நாத் யாத்திரை தொடக்கம்.

தெற்கு காஷ்மீரின் இமயமலையில் அமைந்துள்ள அமர்நாத் குகையில் உள்ள பனிலிங்கத்தை தரிசிக்க ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் செல்வதுண்டு. இந்த ஆண்டு, கொரோனா பரவல் காரணமாக, பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளதால், அமர்நாத் யாத்திரை தாமதமாகி உள்ளதோடு, அதற்கான கால அளவு குறைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஜூலை 21-ம் தேதி முதல் 2020-ம் ஆண்டிற்கான அமர்நாத் யாத்திரை தொடங்குகிறது. இந்த யாத்திரையானது ஆகஸ்ட் 3-ம் தேதி வரை செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சாதுக்களை தவிர, 55 வயதுக்கு குறைவான யாத்ரீகளும் அனுமதிக்கப்படுவார்கள்.

அனைவருக்கும் எல்லையிலேயே சோதனை நடத்தப்படும் என்றும், வைரஸ் தொற்று இல்லை என்று சான்று இருந்தால் மட்டுமே, குகை கோவிலுக்குள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள்  என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

vck thirumavalavan
weather update
sunita williams
BLA
Sunita williams
Union minister Nirmala sitharaman - TVK Leader Vijay