தேசிய போர் வீரர்கள் நினைவிடத்தில் உள்ள தீபங்களோடு இணைக்கப்பட்ட அமர் ஜவான் ஜோதி..!

Published by
லீனா

கடந்த 50 ஆண்டுகளாக அணையாமல் எரிந்து வந்த நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த இந்திய ராணுவ வீரர்களின் நினைவாக இருந்த அமர் ஜவான் ஜோதி, தேசிய போர் வீரர்கள் நினைவிடத்தில் உள்ள தீபங்களோடு இணைக்கப்பட்டுள்ளது. 

1914-21 வரை முதல் உலகப்போரின் போது உயிர் நீத்த பிரிட்டிஷ், இந்திய வீரர்களின் நினைவாக 1921 ஆம் ஆண்டு டெல்லியில் ’இந்தியா கேட்’ நினைவுச்சின்னம் பிரிட்டிஷாரால் அமைக்கப்பட்ட நிலையில், இந்தியா கேட் பகுதியில் 1971-ம் ஆண்டு அமர் ஜவான் ஜோதி என நினைவுச்சின்னம் அமைக்கப்பட்டு அணையா விளக்கு ஏற்றப்பட்டது. இந்த அணையா விலக்கானது சுமார் 50 ஆண்டுகள் அணையாமல் எரிந்துக் கொண்டிருக்கிறது.

இதனையடுத்து, 1947-ம் ஆண்டு சுதந்திரந்திற்கு பின்னர் 1947-48 -ல் பாகிஸ்தானுடன் நடைபெற்ற முதல் போரில் இருந்து தற்போதுவரை நடைபெற்ற போர்களில் வீரமரணமடைந்த வீரர்களின் நினைவாக டெல்லியில் கடந்த 2019-ம் ஆண்டு தேசிய போர் நினைவு சின்னம் அமைக்கப்பட்டது.  இந்த நினைவுச்சின்னமும் இந்தியா கேட் பகுதியிலேயே அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த 50 ஆண்டுகளாக அணையாமல் எரிந்து வந்த நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த இந்திய ராணுவ வீரர்களின் நினைவாக இருந்த அமர் ஜவான் ஜோதி இன்று இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த அணையா தீபம் தேசிய போர் வீரர்கள் நினைவிடத்தில் உள்ள தீபங்களோடு இணைக்கப்பட்டுள்ளது.
டெல்லி அமர்ஜவான் ஜோதியில் ராணுவ வீரர்கள் மரியாதை செலுத்தினர். ராணுவ முறைப்படி அமர் ஜவான் ஜோதி இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில், ஜோதியை ஏந்தி போர் நினைவுச் சின்னம் நோக்கி ராணுவ வீரர்கள் சென்றனர். இந்த நிகழ்வில், முப்படைகளின் மூத்த அதிகாரிகள் கலந்துக் கொண்டுள்ளனர்.

Recent Posts

பாக்., தூதரக அலுவலகத்திற்குள் கொண்டு செல்லப்பட்ட கேக்.! மீடியா முன் ஷாக் கொடுத்த நபர்…,

பாக்., தூதரக அலுவலகத்திற்குள் கொண்டு செல்லப்பட்ட கேக்.! மீடியா முன் ஷாக் கொடுத்த நபர்…,

டெல்லி : பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, புது டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக அலுவலகத்தை நோக்கி ஒரு நபர்…

1 hour ago

பயங்கரவாதிகள் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு மோசமான தண்டனை வழங்கப்படும்! – பிரதமர் மோடி

மதுபானி  : ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டம், பஹல்காமில் பயங்கரவாதிகள் அங்கு வந்திருந்த சுற்றுலாப் பயணிகளை டார்கெட் செய்து அவர்கள்…

1 hour ago

சத்தீஸ்கர் – தெலுங்கானா எல்லையில் நடந்த மோதலில் 3 நக்சல்கள் சுட்டுக்கொலை!

சத்தீஸ்கர்: பிஜப்பூர் மாவட்டம் கரேகுட்டா வனப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது நக்சல் தீவிரவாதிகளுக்கும், அவர்களுக்கும்…

2 hours ago

ஜம்மு காஷ்மீரில் திக்திக் நொடிகள்…பயங்கரவாத தாக்குதலின் புது வீடியோ!

பஹல்காம் : ஜம்மு காஷ்மீர், அனந்த்நாக் மாவட்டம், பஹல்காமில் ஏப்ரல் 22 அன்று, மதியம் 02:50 மணியளவில், 4 முதல்…

2 hours ago

பஹல்காம் தாக்குதல் : தீவிரவாதிகள் பற்றி தகவல் கொடுப்போருக்கு ரூ.20 லட்சம் பரிசு!

பஹல்காம் : ஏப்ரல் 22 அன்று, ஜம்மு - காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காமின் பைசரன் புல்வெளியில் நடந்த…

3 hours ago

காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல்: தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட ராணுவ வீரர் உயிரிழப்பு.!

உதம்பூர் : ஜம்மு -காஷ்மீர் மாநிலம் உதம்பூர் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற தேடுதல் வேட்டையைத் தொடர்ந்து, பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும்…

3 hours ago