நான் தீவிரவாதியா? ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் – பாஜக எம்.பி. பிரக்யா வேண்டுகோள்

Default Image

மக்களவையில் பாஜக எம்.பி.பிரக்யா சிங் கோட்சே ஒரு தேசபக்தர் என்று கூறியது சர்ச்சையாக வெடித்தது.ஏற்கனவே அவர் இவ்வாறு கூறியது சர்ச்சையாக வெடித்த நிலையில் தற்போது மீண்டும் அவர் மக்களவையில் கூறியது பெரும் சர்ச்சையாக மாறியது.இதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களது கண்டனத்தை பதிவு செய்து வந்தனர்.அந்த வகையில்  பிரக்யா சிங் தாகூர்  கருத்து குறித்து காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டார்.அவரது பதிவில்,  தீவிரவாதியான கோட்சேவை தேசபக்தர் என்று தீவிரவாதியான பிரக்யா  கூறியுள்ளார். இந்திய நாடாளுமன்ற வரலாற்றிலேயே இது துன்பமிக்க தினம் ஆகும் என்று தெரிவித்தார்.
பின்பு பாஜக எம்பி பிரக்யா மக்களவையில் தான் கோட்சே கூறியதற்கு மன்னிப்பு தெரிவித்தார்.மேலும் அவர் பேசுகையில்,  என்னை தீவிரவாதி என குறிப்பிட்ட ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் .எந்த ஆதாரமும் இன்றி ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியது எனது கண்ணியத்தை பாதித்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.  

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்