மகாராஷ்டிராவில் உள்ள அனைத்து மாவட்டங்களில் மதுக்கடை விற்பனைக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் காரணமாக இந்தியா முழுவதும் கடந்த மார்ச் மாதம் 24 ஆம் தேதி ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. ஆனால் இந்தியாவில் தொடர்ந்து கொரோனா பதிப்பு அதிகரித்துக்கொண்டே செல்வதால் கொரோனா கட்டுக்குள் வராததால் நேற்றுடன் முடிய இருந்த ஊரடங்கு மேலும் இரண்டு வாரத்திற்கு மத்திய அரசு நீட்டித்துள்ளது.
இந்நிலையில், இந்த ஊரடங்கு காலத்தில் அனைத்து கடைகளும் மூடப்பட்டது. இதில், மதுக்கடைகள் மூடியதால் குடிமகன்கள் பலர் மது கிடைக்காத விரக்தியில் ரசாயனம் குடித்தும் உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து மத்திய அரசு பச்சை மண்டலங்களில் டாஸ்மாக் கடைகள் செயல்பட அனுமதி வழங்கி உள்ளது.
அங்கு 6 அடி சமூக இடைவெளி பின்பற்ற வேண்டும். ஒரே நேரத்தில் 5 பேருக்கு மேல் கூட அனுமதிக்க கூடாது என்ற நிபந்தனையுடன் மத்திய அரசு அனுமதி வழங்கியது. இந்நிலையில், இன்று மகாராஷ்டிராவில் உள்ள அனைத்து மாவட்டங்களில் மதுக்கடை விற்பனைக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.
கொரோனா அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளை தவிர மற்ற இடங்களில் திறக்க அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் கொரோனாவால் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளன. 500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : இன்று ஏப்ரல் 14ஆம் தேதி அண்ணல் அம்பேத்கரின் 135வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதேபோல, தமிழ்…
ஜெய்ப்பூர் : நேற்றைய 2 ஐபிஎல் போட்டிகளில் பிற்பகல் 3.30 மணி ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ்…
சென்னை : கடந்த வாரம் மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா தமிழகம் வந்திருந்த போது, தமிழக அரசியலில்…
சென்னை : இன்று தமிழ் மாதம் சித்திரை முதல் நாள் தமிழ்ப்புத்தாண்டு தினமாகவும் பலரால் கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று தமிழ்நாட்டில்…
சென்னை : இன்று அண்ணல் அம்பேத்கரின் 135வது பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. இதனை சமத்துவ நாளாக தமிழக அரசு அறிவித்து…
சென்னை : இந்த வருட ஐபிஎல் தொடரில் அதளபாதாளத்தில் இருந்த அணிகள் தற்போது கம்பேக் வெற்றியை பதிவு செய்ய ஆரம்பித்துவிட்டன.…