உத்திரப்பிரதேசத்தை சேர்ந்த மருத்துவர் கபீல் கானுக்கு அலகாபாத் உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டங்களில் வன்முறையை தூண்டும் விதத்தில் பேசியதற்காக தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கபீல் கானை கைது செய்து, கடந்த ஜனவரி 29 முதல் உத்தரபிரதேச மாநிலம் மதுரா சிறையில் அடைக்கப்பட்டார். இதனையடுத்து, கபீல் கானின் தாய் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
இந்த வழக்கை விசாரித்த அலகாபாத் உயர்நீதிமன்றம், தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்தது சட்டவிரோதம் என்று கூறி, கபில் கானுக்கு எதிரான தேசிய பாதுகாப்பு சட்ட வழக்கை ரத்து செய்தது, ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. மேலும், கபில் கானை உடனடியாக விடுவிக்க வேண்டும் என உத்தரபிரதேச போலீசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் கைது செய்யப்பட்ட கபிர் கான் 8 மாதங்களாக சிறையில் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடப்படுகிறது.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…