இந்த தேதி வரையில் ரயில் சேவை ரத்து.! மத்திய ரயில்வே அமைச்சகம் புதிய தகவல்.!

Published by
மணிகண்டன்

ஆகஸ்ட் மாதம் 12ம் தேதி வரையில் அனைத்து விதமான பயணிகள் ரயிலும் வழக்கமான கால அட்டவணையில் இயங்காது என தகவல் வெளியாகி உள்ளது.

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொது போக்குவரத்துக்கு ஊரடங்கு தொடங்கிய காலத்திலிருந்தே நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. அதன்படியே ரயில் போக்குவரத்தும்  வழக்கமான கால அட்டவணையில் இயங்காமல் ரயில்சேவை நிறுத்திவைக்கப்பட்டது. தற்போது, ஆகஸ்ட் மாதம் 12ம் தேதி வரையில் அனைத்து விதமான பயணிகள் ரயிலும் வழக்கமான கால அட்டவணையில் இயங்காது என தகவல் வெளியாகி உள்ளது.

அதாவது, மெயில் , எக்ஸ்பிரஸ் மற்றும் புறநகர் ரயில்கள் ஆகியவை வழக்கமான கால அட்டவணையில் வரும் ஆகஸ்ட் 12 வரையில் இயங்காது. தற்போது இயக்கப்பட்டு வரும் சிறப்பு ரயில்கள் மட்டுமே அந்தந்த மாநில அரசுகளின் விதிமுறைகளுக்கு உட்பட்டு இயக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே ஏப்ரல் 14க்கு முந்தைய ரயில்வே முன்பதிவுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு,  பயண தொகையை முழுவதுமாக திருப்பி தரப்படுவதாக மத்திய அரசு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இங்க தகவலானது மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஸ் கோயல் அவர்கள் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Published by
மணிகண்டன்

Recent Posts

டிரம்பின் உத்தரவு: ஏமனில் புகுந்து காலி செய்யும் அமெரிக்கா.! உயரும் பலி எண்ணிக்கை.!

டிரம்பின் உத்தரவு: ஏமனில் புகுந்து காலி செய்யும் அமெரிக்கா.! உயரும் பலி எண்ணிக்கை.!

ஏடன்: அமெரிக்கா ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது பெரிய அளவிலான தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்…

57 minutes ago

ஏ.ஆர்.ரஹ்மான் டிஸ்சார்ஜ்: நலம் விசாரித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

சென்னை : திடீர் உடல்நலக்குறைவால் ஏ.ஆர்.ரகுமான் சென்னை அப்போலோவில் இன்று காலை அனுமதிக்கப்பட்டார். இந்த செய்தியை கேட்ட உடன் முதல்வர்…

2 hours ago

டாஸ்மாக் முறைகேடு: “சிறுமீன்கள் முதல் திமிங்கலங்கள் வரை சிக்கும்”- தவெக தலைவர் விஜய் பரபரப்பு அறிக்கை!

சென்னை : டாஸ்மாக் முறைகேடு விவகாரம் தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமலாக்கத் துறை மார்ச் 6, 2025ல்…

3 hours ago

ஐயோ!! ஏ.ஆர்.ரஹ்மானுக்கு என்ன ஆச்சு? திடீர் நெஞ்சு வலியால் மருத்துவமனையில் அனுமதி.!

சென்னை : பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு அதிகாலை திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து, சென்னை அப்போலோவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவசர சிகிச்சை…

5 hours ago

ஐபிஎல் 2025: கிரிக்கெட் சிகர்களுக்கு குட் நீயூஸ் சொன்ன மெட்ரோ.! சிஎஸ்கே போட்டிக்கு இலவச பயணம்…

சென்னை : 18-வது ஐபிஎல் சீசன் இந்த ஆண்டு வருகின்ற 22-ஆம் தேதி (சனிக்கிழமை) தொடங்கி வரும் மே 25-ஆம்…

18 hours ago

சபாநாயகரை சந்தித்தது ஏன்? ‘இதற்காக தான் போனேன்’ – செங்கோட்டையன் பதில்.!

சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி - சட்டப் பேரவை உறுப்பினர் செங்கோட்டையன் இடையே அதிருப்தி நிலவுவதாக சமூக…

20 hours ago