தேர்தல் பணிகளில் ஈடுபடும் அனைத்து ஊழியர்களும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் – தலைமை தேர்தல் ஆணையர்!

Published by
Rebekal

தேர்தல் பணிகளில் ஈடுபடக் கூடிய அனைவருமே கட்டாயம் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அவர்கள் கூறியுள்ளார்.

தமிழகத்தில் 16வது சட்டமன்ற பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், இதற்கான வேலைகள் எல்லாம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அவர்கள் டெல்லியில் இது குறித்த சில தகவல்களையும் அறிவுறுத்தல்களையும் கூறியுள்ளார். அதாவது 88,000 வாக்குசாவடிகள் தமிழகத்தில் அமைக்கப்பட உள்ளது எனவும், கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு பிரச்சினைகளை நாம் எதிர்கொண்டு வந்தாலும் தேர்தலை சுமுகமாக நடத்துவதற்கு மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் அதிகாரிகளின் பங்கு அதிகம் தேவைப்படுகிறது எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் தேர்தல் பணியில் ஈடுபட கூடிய ஊழியர்கள் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கு தலை வணங்குவதாகவும் தெரிவித்துள்ள அவர், 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தபால் வாக்களிப்பு முறை ஒரு வாய்ப்பாக வழங்கப்படுவதாக தெரிவித்துள்ளார். மேலும் 5 பேர் மட்டுமே வேட்பாளருடன் சேர்ந்து வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்க அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், ஐந்து வாகனங்களுக்கு மேல் பிரச்சாரத்துக்கு அனுமதி இல்லை எனவும் தெரிவித்துள்ளார். அத்துடன் தேர்தல் பணிகளில் ஈடுபடக்கூடிய அனைவருமே கட்டாயம் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

Published by
Rebekal

Recent Posts

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி..!

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி..!

இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…

11 hours ago

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…

19 hours ago

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

1 day ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

2 days ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

2 days ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

2 days ago