கொரோனா வைரஸ் இன்னும் நீங்கவில்லை,மீண்டும் பரவி வருகிறது என்று பிரதமர் மோடி எச்சரித்துள்ளார்.
கொரோனா தொற்றுநோயின் மூன்றாவது அலைக்கு மத்தியில் மாநிலங்கள் கொரோனா கட்டுப்பாட்டு தளர்வுகளை அறிவித்துள்ள நிலையில்,கொரோனா வைரஸுக்கு எதிரான போரில் மக்கள் தங்கள் பாதுகாப்பைக் குறைக்க வேண்டாம் என்றும்,கொரோனா வைரஸ் இன்னும் நீங்கவில்லை, மீண்டும் பரவி வருகிறது என்று பிரதமர் மோடி எச்சரித்துள்ளார்.
இது தொடர்பாக,குஜராத்தின் ஜூனாகத் மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் காணொலி வாயிலாக பங்கேற்ற பிரதமர் மோடி கூறுகையில்:”கொரோனா வைரஸ் நம்மை விட்டு இன்னும் முழுமையாக நீங்கவில்லை.மீண்டும் அது உருமாறி பரவி வருகிறது.மக்கள் அனைவரும் கொரோனாவுக்கு எதிரான தங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நிறுத்திவிட வேண்டாம். ஏனெனில்,கொரோனா மீண்டும் மீண்டும் வரும் தன்மையுடன் இருக்கிறது.அந்த வகையில் கொரோனா எப்போது மீண்டும் தோன்றும் என்று யாருக்கும் தெரியாது,”,என்று கூறினார்.
எனினும்,நாட்டில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த கிட்டத்தட்ட 185 கோடி டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது பொதுமக்களின் ஆதரவின் காரணமாக சாத்தியமானது” என்று கூறியுள்ளார்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…