கொரோனா சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஐஸ்வர்யா ராய்.!

Default Image

ஐஸ்வர்யா ராயும் அவரது மகள் ஆராத்யாவும் தற்போது கொரோனா  சிகிச்சை பெறுவதற்காக மும்பை நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் மற்றும் அவரது மகன் அபிஷேக் பச்சன் ஆகியோருக்கு முதலில் கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து அவர்கள் மும்பையில் உள்ள நானாவதி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

மேலும், அபிஷேக் பச்சனின் மனைவியும் முன்னணி நடிகையுமான ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகள் ஆராத்யாக்கும்  கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் இருவருக்கும் கொரோனா இருப்பது உறுதியானது. இதனை தொடர்ந்து அவர்கள் இருவரும வீட்டிலேயே தனிமை படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.

இந்நிலையில், ஐஸ்வர்யா ராயும் அவரது மகள் ஆராத்யாவும் தற்போது கொரோனா  சிகிச்சை பெறுவதற்காக மும்பை நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

goat vijay gbu ajith
kl rahul kantara
Nainar Nagendran BJP
BJP MLA Nainar Nagendran
Trisha Insta Story
Minister Ponmudi