Categories: இந்தியா

மீண்டும் படுமோசமடையும் காற்றின் தரம்… மழையை எதிர்பார்க்கும் டெல்லி மக்கள்.!

Published by
மணிகண்டன்

தலைநகர் டெல்லியில் காற்றின் தரம் நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது. இதனால் டெல்லி மாநில அரசு செயற்கை மழை திட்டத்தை செயல்படுத்த திட்டமிட்டது. அதற்கிடையில் டெல்லியில் பெய்த மழை காரணமாக காற்றின் தரம் சற்று உயர்ந்து காற்றின் தரம் மிக மோசமான நிலை என்றதில் இருந்து மோசமான நிலை என்றானது.

இப்படி ஏற்ற இறக்கங்களாய் சந்தித்த டெல்லி காற்றின் தரத்தை கடந்த ஒரு மாத கால சராசரியாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ளது. அதன் படி, கடந்த நவம்பர் 1 முதல் நேற்று 29ஆம் தேதி வரையில் டெல்லியின் காற்றின் மாசு அளவீடானது 372ஆக பதிவாகி இருந்தது.

சீனாவின் சுவாச நோய்த்தொற்று.. இந்தியாவில் 6 மாநிலங்களில் எச்சரிக்கை!

இந்த அளவீடானது  கடந்த 2015ஆம் ஆண்டு முதல் மூன்றாவது அதிக மாசுபட்ட மாதமாக இந்த நவம்பர் மாதம் ஆகியுள்ளது.  நவம்பர் 1 மற்றும் 29 க்கு இடையில் டெல்லியின் சராசரி அளவான 372ஆனது  2016இல் 373 மற்றும் 2021ஆம் ஆண்டு 378க்கு பின் மூன்றாவது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

காற்றின் தரத்தை சற்று மேம்படுத்த, படுமோசமான நிலை என்பதில் இருந்து மோசமான எனும் நிலைக்கு கொண்டு வர லேசான மழை எதிர்பார்க்கப்பட்டது.  இந்நிலையில், இன்று (வியாழக்கிழமை) காலை 8 மணி நிலவரப்படி டெல்லியின் காற்றின் தரம் கடுமையான வகைக்கு மோசமடைந்தது. 420 என்ற அளவீட்டில் காற்றறின் தரம்பதிவானது.

வானிலை ஆய்வு மையத்தின் தகவலின்படி, டெல்லியின் பிரதான மேற்பரப்பு காற்று வடகிழக்கு திசையில் இருந்து மணிக்கு  6கிமீ வேகத்தில் வீசக்கூடும். இதன் மூலம் லேசான மழை பெய்யவாய்ப்பு உள்ளது என எதிர்பார்க்கப்படுகிறது.

நாளை (வெள்ளிக்கிழமை) காலை, டெல்லி மேற்பரப்பில் காற்று வடக்கில் இருந்து மணிக்கு 6 முதல் 8கிமீ வேகத்தில் வீசக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. லேசான மழைப்பொழிவு இருக்குமாயின் டெல்லி காற்றின் தரம் சற்று அதிகமாகும் என கூறப்படுகிறது.

Recent Posts

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…

4 hours ago

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

16 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

22 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

22 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

22 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

22 hours ago