காற்று மாசு.. டெல்லியில் இருந்து சோனியாகாந்தி வெளியேற மருத்துவர்கள் அறிவுறுத்தல்..?

Default Image

டெல்லியில் அதிகரித்து வரும் மாசு காரணமாக, காங்கிரஸின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி அடுத்த வாரம் வரை டெல்லியில் இருந்து வெளியேற உள்ளதாக கூறப்படுகிறது. சோனியா காந்தி கடந்த ஆகஸ்ட் மாதத்திலிருந்து சுவாசிப்பதில் பிரச்சினை தொடர்ச்சியாக சிகிச்சைகள் எடுத்துக்கொண்டு வருகிறார்.

மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில், சோனியா காந்தி வாரம் வரை டெல்லியில் இருந்து வெளியேற உள்ளதாகவும், சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி  ஆகியோர் இன்று கோவா செல்கின்றனர் என்று தகவல் வெளியாகி உள்ளது. கோவாவில் சோனியா சுமார் ஒரு வாரம் இருப்பார்.

கடந்த சில ஆண்டுகளாக, சோனியா காந்தி குளிர்கால மாதங்களில் டெல்லிக்கு வெளியே சிறிது நேரம் செலவிடுகிறார். சுகாதார காரணங்களால், டெல்லியில் அதிகரித்து வரும் மாசு காரணமாக சோனியா காந்தி உடல்நிலை மோசமடையும் அபாயம் உள்ளது என மருத்துவர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

சமீபகாலமாக சோனியா அனைத்து கூட்டங்களிலும் வீடியோ மூலம் மட்டுமே பங்கேற்கிறார். தேர்தல் பிரச்சாரம், பொதுக்கூட்டம், நிர்வாகிகள் சந்திப்பு என அனைத்து நிகழ்ச்சிகளையும் ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் மட்டுமே கவனித்து வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்