#BREAKING: மாணவர்களை மீட்க ருமேனியாவில் தரையிறங்கிய ஏர் இந்திய விமானம்..!

Default Image

உக்ரைனில் உள்ள இந்தியர்களை தாயகம் அழைத்து வர ருமேனியாவில் உள்ள புக்கரெஸ்ட் விமான நிலையத்தில் ஏர் இந்தியாவின் AI-1943 சிறப்பு விமானம் சென்றடைந்தது.

உக்ரைன் -ரஷ்யா இடையே போர் நடந்து வரும் நிலையில், உக்ரைனில் சிக்கியுள்ள இந்திய மாணவர்களை பத்திரமாக மீட்டு வரவேண்டும் என தமிழகம் உட்பட பல்வேறு மாநில அரசுகள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் மத்திய அரசிடம் கோரிக்கை வைத்து  வருகின்றனர்.

இதனால், உக்ரைனில் இருந்து சாலை வழியாக ருமேனியாவுக்கு இந்திய மாணவர்களை வரவழைத்து அங்கிருந்து விமானம் மூலம் இந்திய மாணவர்களை அழைத்து வர மத்திய அரசு முடிவு செய்தது. இந்நிலையில், உக்ரைனில் உள்ள இந்தியர்களை தாயகம் அழைத்து வர ருமேனியாவில் உள்ள புக்கரெஸ்ட் விமான நிலையத்தில் ஏர் இந்தியாவின் AI-1943 சிறப்பு விமானம் சென்றடைந்தது.

உக்ரைனில் இந்தியர்கள் சுமார் 20,000 பேர் இருக்க வாய்ப்புள்ளது. எனவும் தமிழகத்தை சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கை 3,000 பேர் வரை இருக்கலாம் என கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்