ஏர் இந்தியா விமானம் மும்மடங்கு கட்டணம் வசூலிப்பதாக இணையத்தில் வெளியான வைரல் வீடியோ.
விமான சேவை வழங்கும் நிறுவன அதிகாரியிடம், வழக்கத்தை விட மும்மடங்கு கட்டணம் வசூலித்ததற்கு பயணிகள் வாக்குவாதம் செய்யும் காட்சிகள் அடங்கிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் இந்த பயணிகள் சமூக இடைவெளியின்றி பயணிக்க வைத்ததாகவும் அந்த வீடியோவில் குற்றம் சாட்டுகின்றனர்.
இதனையடுத்து, இந்த வீடியோவை ஆராய்ச்சி செய்ததில், இந்த வீடியோ இந்திய விமான சேவை வழங்கும் விமானத்தில் எடுக்கப்படவில்லை என தெரியவந்துள்ளது. இந்த வீடியோ உண்மையில் பாகிஸ்தான் நட்டு விமானத்தில் எடுக்கப்பட்டதென்றும், அந்த விமானத்தில் இருக்கை மற்றும் கவர்கள் ஏர் இந்தியா விமானத்தில் இருப்பதை விட வித்தியாசமாக இருப்பதும் தெரிகிறது.
இதனையடுத்து, ஏர் இந்தியா செய்தி தொடர்பாளர் தனஞ்செய் குமார் அவர்கள் இதுகுறித்து விளக்கமளிக்கையில், வீடியோ இந்திய விமானத்தில் எடுக்கப்பட்டதாக நம்பி பலர் இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். வைரல் வீடியோ பாகிஸ்தான் நாட்டு விமானத்தில் எடுக்கப்பட்டது என தெரிவித்துள்ளார்.
மேலும், ட்விட்டரில் ஏர் இந்தியா கணக்கை டேக் செய்து வீடியோ பற்றி புகார் அளித்தவருக்கும், ஏர் இந்தியா ட்விட்டர் கணக்கில் இருந்து பதில் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…