ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சொல்லாமல் சொந்த மாநிலத்தைப் பற்றி கவலைப்படுங்கள் என்று மம்தா பானர்ஜிக்கு, ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சித் தலைவர் ஓவைசி பதிலடி கொடுத்துள்ளார்.
கொல்கத்தாவின் நடைபெற்ற பேரணி ஒன்றில் பேசிய மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பாஜகவுக்கு உதவ இங்கே ஒரு கட்சி உள்ளது என்றும் வாக்குகளைப் பிப்பதற்காக ஹைதராபாத்தில் இருந்து ஒரு கட்சியைப் பிடித்துக் கொண்டு வந்திருக்கிறார்கள் எனவும் தெரிவித்திருந்தார். மேலும், பாஜக அவர்களுக்கு பணம் தருகிறது. அதனால் அவர்கள் வாக்குகளைப் பிரிக்கிறார்கள். இது பீகார் தேர்தலில் நிரூபிக்கப்பட்டது என்று ஓவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம் மீது விமர்சித்தார்.
இதற்கு பதிலடி கொடுத்த ஓவைசி, இன்றைய நாள் வரை ஓவைசியை பணத்தால் யாரும் வாங்க முடியவில்லை. மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு ஆதாரமற்றது. ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை அடுக்காமல் தனது சொந்த மாநிலத்தைப் பற்றி கவலைப்படுங்கள். அவரது மக்கள் பலர் பாஜகவுக்கு செல்கிறார்கள். தனது பேச்சால் பீகார் வாக்காளர்களையும் எங்களுக்கு வாக்களித்த மக்களையும் அவமதித்துள்ளார். முன்னதாக பாஜகவை மம்தா பாராட்டியுள்ளார். அவரும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஓர் அங்கமாக இருந்தார். இதுபோன்ற தேவையில்லாத வார்த்தைகளை தவிர்க்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
கராச்சி : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் மூன்றாவது போட்டியில், ஆப்கானிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகள் மோததின. இந்தப் போட்டி…
கொல்கத்தா : சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் (இந்தியா விளையாடும் போட்டிகள் மட்டும்) தொடங்கி நடைபெற்று வருகிறது. …
கடலூர் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தனது கடலூருக்கு சென்றுள்ளார். அங்கு பல்வேறு முடிவுற்ற மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் …
சென்னை : இன்று திரைக்கு வந்துள்ள, தனுஷ் இயக்கிய ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’, பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள…
கராச்சி : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் மூன்றாவது போட்டியில், ஆப்கானிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டி…
சென்னை : 'எந்திரன்' திரைப்படத்தின் காப்புரிமை தொடர்பாக இயக்குநர் ஷங்கரின் ரூ.10.11 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியது திரைத்துறையில்…