இத்தாலி நாட்டை சேர்ந்த அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடம் இருந்து 12 ஹெலிகாப்டர்கள் வாங்க காங்கிரஸ் கட்சியின் ஆட்சியில் ஒப்பந்தம் செய்யப்பட்டது.இந்த ஒப்பந்தத்தில் ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.பல்வேறு தரப்பினருக்கு சுமார் 300 கோடி ரூபாய் வரை லஞ்சம் கொடுத்துள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.ஆகவே இந்த வழக்கினை சிபிஐ விசாரித்தது.
மேலும் இது தொடர்பாக அமலாக்கத்துறையும் தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.அதாவது வெளிநாட்டில் இருந்து சட்டவிரோதமாக இந்தியாவுக்கு பணம் வந்துள்ளதாக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த முறைகேடு குறித்து சம்மந்தப்பட்ட நபர்களை அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து கைது செய்தது.இந்த வழக்கு தொடர்பாக தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியான ராஜீவ் சக்சேனாவை அமலாக்கத்துறை கைது செய்தது.கடந்த 2019-ஆம் ஆண்டு துபாயில் இருந்து நாடு கடத்தப்பட்ட அவர் தற்போது ஜாமீனில் வெளியே உள்ளார்.
இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான ராஜிவ் சக்சேனா அமலாக்கத்துறையிடம் வாக்கு மூலம் அளித்துள்ளார்.அவரது வாக்குமூலம் சுமார் 1000 பக்கங்களை கொண்டுள்ளது என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது .அதிலும் குறிப்பாக எந்தெந்த நிறுவனங்களிடம் இருந்து எவ்வாறு லஞ்சம் கொண்டு வரப்பட்டது என்று விசாரணையில் கூறினார். “அவ்வப்போது” பிரிஸ்டைன் ரிவர் என்ற வெளிநாட்டு நிறுவனத்திடமிருந்து பணத்தைப் பெற்றதாகக் கூறினார் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது .கமல்நாத்தின் மகனான பாகுல் நாத் இந்த நிறுவனத்தை நிர்வகித்து வருவதாக கூறினார்.இந்த வழக்கில்,ஆயுத வியாபாரி மோகன் குப்தா மற்றும் மத்திய பிரதேச முன்னாள் முதலமைச்சர் கமல்நாத்தின் மருமகன் ராதுல் புரி ஆகியோருக்கும் தொடர்பு உள்ளது என்று தெரிவித்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…