மூன்று புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் ,விவசாயிகளுக்கு மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கடிதம் எழுதியுள்ளார்.
விவசாயிகளுக்கு எழுதிய எட்டு பக்க கடிதத்தில், குறைந்தபட்ச ஆதார விலை தொடர்பாக எழுத்துப்பூர்வ உத்தரவாதம் அளிக்க அரசாங்கம் தயாராக உள்ளது.அரசின் மூன்று புதிய வேளாண் சட்டங்களால் பெரும்பாலான விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ஆனால் பொய்யை அடிப்படையாகக் கொண்டு, பதட்டங்களை உருவாக்கும் சதித்திட்டத்தின் ஒரு பகுதியாக ஒரு குறிப்பிட்ட பிரிவினரால் சில குழப்பங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
“நான் ஒரு விவசாயியின் குடும்பத்தைச் சேர்ந்தவன், குழந்தை பருவத்திலிருந்தே, விவசாயிகளின் கடினமான வாழ்க்கையை நான் அனுபவித்திருக்கிறேன்.சட்டத்தை அமல்படுத்திய பின்னர், குறைந்தபட்ச ஆதார விலை கொள்முதல் இந்த முறை ஒரு புதிய சாதனையை படைத்துள்ளது என்பது மிகவும் திருப்திகரமாக இருக்கிறது” .குறைந்தபட்ச ஆதார விலை பெயரில் ஒரு பொய் பரப்பப்படுகிறது. உண்மை எதுவும் மாறப்போவதில்லை” என்பதாகும்.”கடந்த ஆறு ஆண்டுகளில், மோடி அரசு விவசாயிகளுக்காக நிறைய நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இந்த மசோதாக்கள் மூலம், விவசாயிகள் தங்கள் தயாரிப்புகளை எங்கு வேண்டுமானாலும் விற்க அரசாங்கம் கூடுதல் அனுமதி வழங்கியுள்ளது”. இது தொடர்பாக எழுத்துப்பூர்வ உத்தரவாதம் அளிக்க அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் நரேந்திர சிங் தோமர் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
சென்னை : ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவில் இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.66,000-ஐ கடந்தது நகை…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் இன்று தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கை 2025 – 2026 (பட்ஜெட் 2025)-ஐ…
சென்னை : ஜோ படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக ரியோ நடிக்கும் படங்களின் மீது எதிர்பார்ப்புகள் எழுந்த சூழலில் அவர்…
சென்னை : இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 2025 2026 ஆம்…
சென்னை : பலரும் பார்த்து ரசித்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய கிரிக்கெட் அணி வெற்றிபெற்ற நிலையில், அடுத்ததாக கிரிக்கெட் ரசிகர்களுடைய…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் இன்று தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கை 2025 - 2026 (பட்ஜெட் 2025)-ஐ…