சிகரெட் மற்றும் புகையிலை பொருட்களை பயன்படுத்துவதற்கான வயது 21 ஆக உயர்வு!

Published by
லீனா

மத்திய அரசு சிகரெட் மற்றும் புகையிலை பொருட்களின் விற்பனை செய்வதற்கான வயது 18 லிருந்து 21 ஆக உயர்த்துவதற்கான மசோதாவை தயாரித்துள்ளது.

மத்திய அரசு சிகரெட் மற்றும் புகையிலை பொருட்களின் விற்பனை செய்வதற்கான வயது 18 லிருந்து 21 ஆக உயர்த்துவதற்கான மசோதாவை தயாரித்துள்ளது. இதற்காக சிகரெட் மற்றும் புகையிலைப் பொருட்கள் திருத்த சட்டம் 2020 அரசாங்கம் வரைவு மசோதா தயார் செய்துள்ளது. இது விரைவில் சட்டம் ஆகும் என கூறப்படுகிறது.

இந்த மசோதா சிகரெட் மற்றும் புகையிலை தயாரிப்புகளுக்கான 2003ஆம் ஆண்டு சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.  எந்த ஒரு நபரும் சிகரெட் அல்லது வேறு எந்த புகையிலை பொருட்களையும் 21 வயதுக்கு கீழே உள்ள நபர்களுக்கும், கல்வி நிறுவனத்தில் 100 மீட்டர் சுற்றளவில் எந்தப் பகுதியிலும் விற்கவோ, விற்பனை செய்யவோ அனுமதிக்கக் கூடாது என கூறப்பட்டுள்ளது.

அவ்வாறு செய்தால், அவர்களுக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை அல்லது ஒரு லட்சம் வரை அபராதம் மற்றும் இரண்டாவது முறையும் இந்த தவறை செய்தால், ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ஐந்து லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும். சட்டவிரோத சிகரெட் மற்றும் புகையிலை பொருட்களை உற்பத்தி செய்வதற்கும், விற்பனை செய்வதற்கும் இந்த மசோதாவில் ஒரு விதி உள்ளது.

அதன்படி சட்டவிரோத தயாரிப்புகளை விற்பனை செய்தால் ஒரு ஆண்டு சிறை தண்டனையும், 50 ஆயிரம் அபராதமும், இரண்டாவது முறை அதே தவறை செய்தால் 2 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ஒரு லட்சம் அபராதம் விதிக்கப்படும். தடை செய்யப்பட்ட இடங்களில் புகை பிடிப்பதற்கு அபராதம் ரூ.200 இல் இருந்து ரூ.2,000 ஆக உயர்த்தப்படுகிறது.

Published by
லீனா

Recent Posts

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…

15 hours ago

பாஸ்போர்ட் அப்ளை செய்ய போறீங்களா.? அடுத்த 3 நாட்கள் முடியவே முடியாது.!

மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…

15 hours ago

INDvsBAN : “அவர் ரொம்ப உதவி பண்ணாரு”! சதம் விளாசிய பின் அஸ்வின் பேச்சு!

சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…

15 hours ago

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்! தங்கலான் முதல் வாழ வரை!

சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…

16 hours ago

‘இட்லி கடை’ போட்ட தனுஷ்.! மீண்டும் கேங்ஸ்டர் படமா?

சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…

16 hours ago

INDvBAN : சம்பவம் செய்து வரும் அஸ்வின்-ஜடேஜா! வலுவான நிலையில் இந்தியா!

சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…

16 hours ago