மீண்டும் சோனியா காந்தியிடம் அமலாக்க துறை விசாரணை தொடங்கியது… டெல்லியில் போராட்டமும் தொடங்கியது…

Default Image

நேஷனல் ஹெரால்ட் வழக்கில் இன்று மீண்டும் அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராகியுள்ளார் சோனியா காந்தி. 

நேஷனல் ஹெரால்ட் பத்திரிகை நிறுவனத்தை சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி க்கு தொடர்புடைய நிறுவனத்திற்கு மாற்றியபோது, முறைகேடாக பண பரிமாற்றம் செய்ததாக கூறி பாஜக முக்கிய தலைவர் சுப்ரமணிய சாமி புகார் அளித்து இருந்தார்.

அதன் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதன் விசாரணை கடந்த வியாழக்கிழமை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் நடைபெற்றது.  அப்போது நாடு முழுவதும் காங்கிரசார் பல இடஙக்ளில் தங்கள் எதிர்ப்பை காட்ட போராட்டம் நடத்தினர்.

அன்று, சுமார் 2 மணிநேரம் விசாரணை நடைபெற்றது. இதனை தொடர்ந்து, தற்போது மீண்டும் இன்று அமலாக்க துரையின் விசாரணைக்கு சோனியா காந்தி ஆஜராகியுள்ளார்.

இதனை எதிர்த்து, பாராளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் மகாத்மா காந்தி நினைவிடத்தில் இந்த போராட்டத்தை நடத்த திட்டமிட்டனர். ஆனால் அதற்கு அதிகாரிகள் அனுமதியளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்