3 மாநில முதல்வர்கள் யார்.? மேலிட பொறுப்பாளர்களை நியமித்த பாஜக.!

Published by
மணிகண்டன்

கடந்த நவம்பர் மாதம் நடைபெற்று முடிந்த 5 மாநில தேர்தலில் சத்தீஸ்கர், ராஜஸ்தான் , மத்திய பிரதேசம் என 3 மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியமைக்க உள்ளது. 5 மாநில தேர்தலில் ஒரே ஒரு மாநிலத்தில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சி தெலுங்கானா மாநில முதல்வர் யார் என உடனடியாக அறிவித்து நேற்று ரேவந்த் ரெட்டி தெலுங்கானா மாநில முதல்வராக பொறுப்பேற்று விட்டார்.

ஆனால் , 3 மாநில தேர்தலில் வெற்றி பெற்ற பாஜக இன்னும் ஒரு மாநிலத்தில் கூட மாநில முதல்வர் யார் என அறிவிக்காமல் இருந்து வருகிறது.  சத்தீஸ்கர், ராஜஸ்தான் , மத்திய பிரதேசம் ஆகிய 3 மாநிலத்திலும் ஏற்கனவே முன்னாள் முதல்வராக இருந்த ராமன் சிங், வசுந்தரா ராஜே, சிவராஜ் சிங் சவுகான் அவர்களையே நியமிக்கலாமா அல்லது புதியவர்களை நியமிக்கலாமா என்ற யோசனையில் உள்ளது .

தேர்தல் வெற்றி.! மத்திய அமைச்சர்கள் ராஜினாமா.! அமைச்சரவையில் திடீர் மாற்றம்.!

சத்தீஸ்கர் :

சத்தீஸ்கர் மாநிலத்தில், இதுவரை 3 முறை முதல்வர் பொறுப்பில் இருத்துள்ள ராமன் சிங் முதலமைச்சர் ரேஸில் முன்னணியில் உள்ளார். அடுத்ததாக  அம்மாநில முன்னாள் பாஜக தலைவர் விஷ்ணு தேவ் சாய் அவர்களும் உள்ளார். அடுத்து முக்கியமாக மத்திய அமைச்சராக இருந்து தனது பதவியை ராஜினாமா செய்து தான் வென்ற சர்குஜா மக்களவை தொகுதிக்குட்பட்ட 11 சட்டமன்ற தொகுதிகளிலும் பாஜக வெல்ல முக்கிய காரணமாக விளங்கியவர் ரேணுகா சிங். இவரும் சத்தீஸ்கர் மாநில முதலமைச்சர் ரேஸில் முக்கிய பங்கு வகிக்கிறார். நேற்று பாஜக தலைவர் ஜேபி நட்டாவுடன் ஆலோசனை நடத்தியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மத்திய பிரதேசம் :

மத்திய பிரதேசத்தில் எந்த பிரச்னையும் இல்லை என்றே தெரிகிறது. ஏற்கனவே 4 முறை முதல்வராக பொறுப்பில் இருந்து இந்த முறை அதிக தொகுதிகளை பாஜக வெல்ல காரணமாக இருந்த சிவராஜ் சிங் சவுகான் தான் ம.பி முதல்வராக தேர்ந்தெடுக்கப்படுவார் என கூறப்படுகிறது. இருந்தும், மத்திய அமைச்சர் பிரஹலாத் படேல், மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர், கைலாஷ் விஜய்வர்கியா, ஜோதிராதித்ய சிந்தியா உள்ளிட்ட பலரும் முதல்வர் ரேஸில் உள்ளனர். ஆனால், இப்போதைய முதல்வர் சிவராஜ் சிங் சவுகானின் பெயர் போட்டியில் முன்னணியில் உள்ளது. அவருக்கு தற்போது வரை யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

ராஜஸ்தான் :

ராஜஸ்தான் மாநிலத்தில் 2 முறை முதல்வர் பொறுப்பில் இருந்த வசுந்தரா ராஜே  பெயர் முன்னணியில் இருந்தாலும், அம்மாநில பாஜக தலைவர் சி.பி.ஜோஷியும் இந்த ரேஸில் முக்கிய பங்கு வகிக்கிறார். அதுமட்டுமில்லாமல், தியா குமாரி மற்றும் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் ஆகியோரும் முதல்வருக்கான போட்டியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பாஜக முடிவு :

இதன் காரணமாக தற்போது பாஜக சார்பில் 3 மாநில முதலமைச்சர்கள் யார் என தேர்ந்தெடுக்க பாஜக தலைமை பாஜக மேலிட பொறுப்பாளர்களை நியமித்துள்ளது. அதன்படி,

ராஜஸ்தான் :

தேசிய பொதுச் செயலாளர் வினோத் தாவ்டே மற்றும் ராஜ்யசபா எம்.பி சரோஜ் பாண்டே ஆகியோர் ராஜஸ்தான் மாநிலத்திற்கு மேலிட பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.

மத்திய பிரதேசம் :

ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார், டாக்டர் கே.லக்ஷ்மன், ஆஷா லக்ரா ஆகியோர் மத்தியப் பிரதேசத்திற்கு மேலிட பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.

சத்தீஸ்கர் :

மத்திய அமைச்சர்களான அர்ஜுன் முண்டா, சர்பானந்தா சோனோவால், துஷ்யந்த் குமார் கவுதம் ஆகியோர் சத்தீஸ்கர் மாநிலத்திற்கு மேலிட பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.

Recent Posts

“சிறந்த நடிகர்களில் ஒருவர் விஜய்”! GOAT படத்தை பாராட்டிய பாடலாசிரியர்!

சென்னை : கோட் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அதுவும் ரிலீஸ் ஆன முதல்…

12 hours ago

“அத்தான் அத்தான்”.. அழகாக வெளியான கார்த்தியின் ‘மெய்யழகன்’ டீசர்.!

சென்னை : இயக்குனர் சி பிரேம் குமார் இயக்கத்தில் கார்த்தி மற்றும் அரவிந்த் சாமி முக்கிய வேடங்களில் நடித்துள்ள "மெய்யழகன்"…

12 hours ago

எனக்கு ஏன் காங்கிரஸ் சீட் கொடுக்கவில்லை.? பஜ்ரங் புனியா விளக்கம்.!

டெல்லி : வரும் அக்டோபர் மாதம் நடைபெற உள்ள ஹரியானா மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் மல்யுத்த…

12 hours ago

“RCB கேப்டன் கே.எல்.ராகுல்”! கோஷமிட்ட ரசிகர்கள்..வைரலாகும் வீடியோ!

சென்னை : நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் லக்னோ அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் பெயர் ட்ரெண்டிங்கில் இருந்தது என்றே சொல்லவேண்டும். ஏனென்றால்,…

12 hours ago

“வயிற்றெரிச்சல் பழனிச்சாமி., உங்களுக்கு அருகதை இல்லை .” ஆர்.எஸ்.பாரதி கடும் கண்டனம்.!

சென்னை :  அசோக் நகர் அரசுப் பள்ளியில் மகாவிஷ்ணு என்பவர், மாற்றுத்திறனாளிகள் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதும், அதனை கண்டித்த…

13 hours ago

நிச்சயம் முடிந்து 5 மாதம்: திருமணத்தை நிறுத்திய மலையாள மேக்கப் கலைஞர்.!

திருவனந்தபுரம் : கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த பிரபல மேக்கப் கலைஞரும், திருநங்கையுமான சீமா வினீத், திருமணத்தில் இருந்து விலகுவதாக…

13 hours ago