இந்தியா

41 தொழிலாளர்களை மீட்ட பின் அங்கிருந்த கோவிலில் வழிபட்ட அர்னால்ட் டிக்ஸ்..!

Published by
லீனா

கடந்த நவம்பர் 12-ஆம் தேதி உத்தராகண்ட் மாநிலம் உத்தர்காசி மாவட்டத்தில் நடைபெற்று வந்த சுரங்கப்பாதையில் நிலச்சரிவு ஏற்பட்டு 41 தொழிலாளர்கள் சிக்கி கொண்டனர். 17 நாட்களாக இவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வந்தது.

நேற்று இயந்திரம் மூலம் துளையிடும் பணி நிறுத்தப்பட்டு எலிவளைச் சுரங்க முறை மூலம் தொழிலாளர்களைக் கொண்டு துளையிடும் பணி தொடங்கியது. எலிவளைச் சுரங்க முறையில் ஈடுபட்ட பணியாளர்கள் கைக்கருவிகளை கொண்டு  சுரங்கப்பாதையை உருவாக்கினார்கள்.

இந்த எலிவளைச் சுரங்க முறை மூலம் ஒரு நபர் மட்டுமே ஊர்ந்து செல்லக்கூடிய அளவுக்கான ஒரு துளையை உருவாக்கி 41 தொழிலாளர்களும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். மீட்புப் பணியில் தேசிய பேரிடர் மீட்பு படை, மாநில பேரிடர் மீட்பு படைகளைச் சேர்ந்த வீரர்கள் ஈடுபட்டனர்.

 மீட்கப்பட்ட தொழிலாளர்களை முதல்வர் புஷ்கர் சிங் தாமி மற்றும் மத்திய அமைச்சர் வி.கே.சிங் ஆகியோர் மாலை அணிவித்து வரவேற்றனர். இதனை தொடர்ந்து மீட்கபட்ட தொழிலாளர்கள் அனைவரும் மருத்துவ பரிசோதனைக்காக ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

இந்த நிலையில், ஆஸ்திரேலியா நிபுணர் அர்னால்ட் டிக்ஸ் அவர்கள் 41 தொழிலாளர்களையும் மீட்ட பின் அங்கு இருந்த கோயிலில் மண்டியிட்டு நன்றி தெரிவித்தார். அவர் கூறுகையில், நாங்கள் கிரிக்கெட்டில் மட்டும் சிறந்தவர்கள் அல்ல, சுரங்க விபத்து மீட்புப் பணி உள்பட மற்ற விஷயங்களிலும் சிறந்தவர்களே. இந்த பணியில் என்னை ஈடுபடுத்திய எங்கள் நாட்டு பிரதமர் ஆண்டனி அல்பெனிஸ்-க்கு எனது நன்றிகள் என தெரிவித்துள்ளார்.

மேலும், மீட்பு பணியில் பங்கெடுத்தது கவுரவம்; ஒரு தந்தையாக, தொழிலாளர்களை அவர்களது பெற்றோர்களிடம் ஒப்படைத்ததில் மகிழ்ச்சி. மீட்பதற்கு என்ன செய்ய வேண்டும் என எங்களுக்கு புரிதல் இருந்தது; நாங்கள் கள் சிறந்த குழுவாக பணியாற்றினோம். இந்தியாவில் சிறந்த பொறியாளர்கள் உள்ளனர்; இந்த வெற்றிகரமான பணியின் ஒரு பகுதியாக இருந்ததில் மகிழ்ச்சி என தெரிவித்துள்ளார்.

Recent Posts

“சிறந்த நடிகர்களில் ஒருவர் விஜய்”! GOAT படத்தை பாராட்டிய பாடலாசிரியர்!

சென்னை : கோட் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அதுவும் ரிலீஸ் ஆன முதல்…

12 hours ago

“அத்தான் அத்தான்”.. அழகாக வெளியான கார்த்தியின் ‘மெய்யழகன்’ டீசர்.!

சென்னை : இயக்குனர் சி பிரேம் குமார் இயக்கத்தில் கார்த்தி மற்றும் அரவிந்த் சாமி முக்கிய வேடங்களில் நடித்துள்ள "மெய்யழகன்"…

12 hours ago

எனக்கு ஏன் காங்கிரஸ் சீட் கொடுக்கவில்லை.? பஜ்ரங் புனியா விளக்கம்.!

டெல்லி : வரும் அக்டோபர் மாதம் நடைபெற உள்ள ஹரியானா மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் மல்யுத்த…

12 hours ago

“RCB கேப்டன் கே.எல்.ராகுல்”! கோஷமிட்ட ரசிகர்கள்..வைரலாகும் வீடியோ!

சென்னை : நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் லக்னோ அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் பெயர் ட்ரெண்டிங்கில் இருந்தது என்றே சொல்லவேண்டும். ஏனென்றால்,…

13 hours ago

“வயிற்றெரிச்சல் பழனிச்சாமி., உங்களுக்கு அருகதை இல்லை .” ஆர்.எஸ்.பாரதி கடும் கண்டனம்.!

சென்னை :  அசோக் நகர் அரசுப் பள்ளியில் மகாவிஷ்ணு என்பவர், மாற்றுத்திறனாளிகள் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதும், அதனை கண்டித்த…

13 hours ago

நிச்சயம் முடிந்து 5 மாதம்: திருமணத்தை நிறுத்திய மலையாள மேக்கப் கலைஞர்.!

திருவனந்தபுரம் : கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த பிரபல மேக்கப் கலைஞரும், திருநங்கையுமான சீமா வினீத், திருமணத்தில் இருந்து விலகுவதாக…

13 hours ago