தடை மீறி போராட்டம் நடத்தியதாக ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் எம்பிக்கள் கைது செய்யப்பட்டுள்ளதை அடுத்து, பிரியங்கா காந்தியும் கைது செய்யப்பட்டார்.
விலைவாசி உயர்வு, மற்றும் பணவீக்கம் அதிகரிப்புக்கும் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், ஆளும் பாஜக அரசுக்கு எதிராக இன்று நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் காங்கிரசார் போராட்டம் நடத்தி வந்தனர்.
டெல்லியில் போராட்டம் நடத்திய ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் எம்பிக்கள் , தடை மீறி போராட்டம் நடத்தியதாக கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இதனை தொடர்ந்து, தற்போது காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முக்கிய தலைவரான பிரியங்கா காந்தியும் அவருடன் போராட்டம் நடத்திய காங்கிரஸ் கட்சிக்காரர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட அனைவரும் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளனர். மாலை அவர்கள் விடுவிக்கப்படுவர் என கூறப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெறுவதால், நாடாளுமன்றத்தை சுற்றியுள்ள பகுதிகளிலும், காங்கிரஸ் தலைமை அலுவலகத்திலும் 144 தடை போடப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
சென்னை : இந்தியா அணி வங்கதேச அணியை தொடர்ந்து நியூஸிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுடனும் டெஸ்ட் போட்டிகள் விளையாடவிருக்கிறது. மேலும்,…
சென்னை : நேச்சுரல் ஸ்டார் நானி நடிப்பில் சமீபத்தில் வெளியான "சரிபோதா சனிவாரம்" திரைப்படம் OTT ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.…
சென்னை : விருமாண்டி படம் சொன்னாலே போதும் நம்மளுடைய நினைவுக்கு வருவது கமல்ஹாசனுக்கு அடுத்தபடியாக அபிராமி தான் நினைவுக்கு வருவார்.…
சென்னை : தமிழகத்தின் சில பகுதிகளில் வெயில் கொளுத்தி எடுத்தாலும், பல பகுதிகளிலும் நேற்று நள்ளிரவு முதல் விடிய காலை…
பெங்களூரு : ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஆன்மீக தலமான திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில்,…
சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம்…