பாச போராட்டம்…முதலையிடம் இருந்து குட்டியை காப்பாற்றிய தாய் யானை…வைரலாகும் வீடியோ.!
முதலையிடம் இருந்து தனது குட்டியை காப்பாற்றுவதற்காக தாய் யானை போராடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ஸ்ரீலங்காவில் உள்ள யாலாநேஷனல் பூங்காவில் ஒரு தாய் யானை தனது குட்டியுடன் தண்ணீர் குடிப்பதற்காக அங்கிருந்த சேற்று குட்டைக்கு வந்தது. அப்போது சேற்றில் நின்று கொண்டு குட்டி யானை விளையாடி கொண்டிருந்தபோது நீரின் அடியில் இருந்து ஒரு முதலை ஒன்று வேகமாக வந்து குட்டி யானையை தாக்க முயன்றது.
இதனை கண்டு கோபம் அடைந்த தாய் யானை மிகவும் ஆக்ரோஷத்துடன் முதலையை தாக்கியது. முதலியையும் உயிரை காப்பாற்றி கொள்ளவேண்டும் என்பதற்காக குட்டையில் இருந்து தப்பி வேகமாக ஓடியது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் மிகவும் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவுக்கு மக்கள் பல்வேறு கருத்துக்களை பதிவிட்டுள்ளனர். வீடியோவை பார்த்த ஒருவர் அம்மாக்கள் தங்கள் குழந்தைகளைப் பாதுகாக்க எந்த எல்லைக்கும் செல்லலாம்” என்பதற்கு இந்த வீடியோ உதாரணம் என கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
தண்ணீர் குடித்துக்கொண்டிருந்த தனது குட்டியை காப்பாற்றுவதற்காக யானை முதலையுடன் போராடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. #Dinasuvadu | #YalaNationalPark #SriLanka | #Elephant pic.twitter.com/Jf5C9Istpj
— Dinasuvadu (@Dinasuvadu) April 14, 2023