தாஜ்மஹால், ஆக்ரா கோட்டை, ஃபதேபூர் சிக்ரி மற்றும் பிற பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னங்களுக்கு இன்று இலவச நுழைவு அனுமதிக்கப்படுகிறது.
உலக பாரம்பரிய வாரத்தின் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில் அனைத்து தொல்லியல் துறையின் பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னங்களுக்கு சுற்றுலாப் பயணிகள் இலவச நுழைவைப் பெறலாம் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 19 முதல் 25 வரை உலக பாரம்பரிய வாரம் கொண்டாடப்படுகிறது.
நவம்பர் 19 ஆம் தேதி தாஜ்மஹால், ஆக்ரா கோட்டை, ஃபதேபூர் சிக்ரி மற்றும் பிற பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னங்களுக்கு இந்திய மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலவச நுழைவைப் பெறுவார்கள் என்று கண்காணிப்பு தொல்பொருள் ஆய்வாளர் (ஆக்ரா வட்டம்) ராஜ் குமார் படேல் தெரிவித்துள்ளார்.
தாஜ்மஹாலின் நுழைவு இலவசம், ஆனால் நினைவுச்சின்னத்தின் உள்ளே இருக்கும் முக்கிய கல்லறையைப் பார்வையிட சுற்றுலாப் பயணிகள் 200 ரூபாய் டிக்கெட் வாங்க வேண்டும்,” என்று அவர் கூறினார். படேல் மேலும் கூறுகையில், “உலக பாரம்பரிய வாரம் முழுவதும், நினைவுச்சின்னங்களில் பொது கலாச்சார நடவடிக்கைகள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்படும் என்று கூறியுள்ளார்.
இதே போல் தமிழகத்திலும் உலக பாரம்பரிய வாரத்தை முன்னிட்டு மதுரை திருமலை நாயக்கர் மகாலில், பொதுமக்களுக்கு காலை 10 முதல் மாலை 6 மணி வரை இலவச அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…