நாடாளுமன்றத்தின் இன்றைய நிகழ்வுகள் தொடங்கிய 3 நிமிடங்களில் இரு அவைகளும் மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர்:
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் எம்பி தகுதி நீக்கம் தொடர்பாக எதிர்க்கட்சிகளின் அமளியில் ஈடுபட்டதால், லோக்சபா மற்றும் ராஜ்யசபா கடந்த மார்ச் 29 அன்று இன்று கால 11 மணிக்கு தொடங்கும் என ஒத்திவைக்கப்பட்டிருந்தது. அதன்படி, நான்கு நாள் இடைவேளைக்குப் பிறகு நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று காலை 11 மணிக்கு மீண்டும் தொடங்கியது.
இரு அவைகளும் தொடங்கிய 3 நிமிடங்களிலேயே எதிர்க்கட்சியினர், ராகுல் தகுதி நீக்கம், அதானி விவகாரங்கள் தொடர்பாக அமளியில் ஈடுபட, ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும் என ஆளும் கட்சி பாஜகவும் அமளியில் ஈடுபட்டதால் இரு அவைகளும் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
இதற்கிடையில், இரு அவைகளும் தொடங்கிய பின்னர், எம்.பி கிரிஷ் பாபட், முன்னாள் எம்.பி இன்னசென்ட் ஆகியோருக்கு இரங்கல் தெரிவித்தனர். புனேயில் இருந்து பாஜக எம்பியாக இருந்த கிரிஷ் பாபட் மார்ச் 29 அன்று காலமானார். மேலும், திருச்சூரில் உள்ள சாலக்குடி தொகுதியின் முன்னாள் சுயேச்சை எம்பி இன்னசென்ட் மார்ச் 26 அன்று காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…