Categories: இந்தியா

அதானி குழுமம் பங்குகள் விலை 4-வது நாளாக சரிவு!

Published by
பாலா கலியமூர்த்தி

அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் விலை நான்காவது நாளாக தொடர்ந்து சரிவை சந்தித்துள்ளன.

அதானி பங்குகள் விலை 4வது நாளாக சரிவு:

adaniport

அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் விலை நான்காவது நாளாக தொடர்ந்து சரிவை சந்தித்துள்ளன. அதன்படி, அதானி போர்ட், அதானி பவர், அதானி டிரான்ஸ்மிஷன், அதானி கிரீன் எனர்ஜி, அதானி டோட்டல் கேஸ் மற்றும் அதானி வில்மர் நிறுவன பங்குகள் விலை சரிந்துள்ளன.

ஹிண்டன்பர்க் நிறுவனம் அறிக்கை:

அதானி குழுமம் மோசடியில் ஈடுபட்டதாக ஹிண்டன்பர்க் நிறுவனம் அறிக்கை வெளியிட்டதை தொடர்ந்து அதானி குழும பங்குகள் விலை தொடர்ந்து நான்காவது நாளாக சரிவை சந்தித்து வருகிறது.

இதனிடையே, அமெரிக்காவை சேர்ந்த முதலீட்டுஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனம் அண்மையில் வெளியிட்ட ஒரு அறிக்கையில் அதானிக்கு சொந்தமான நிறுவனங்கள் பங்கு சந்தையை தவறாக கையாள்கிறது, கணக்குகளில் முறைகேடு இருப்பதாகவும் குறிப்பிட்டு இருந்தது.

பணக்காரர் வரிசையில் அதானி சரிவு:

இந்த அறிக்கையை தொடர்ந்து அதானி குழும நிறுவனங்களின் பங்கு மதிப்பு தொடர்ந்து சரிந்தன. இன்று நான்காவது நாளாக பங்குகள் விலை சரிவை சந்தித்துள்ளது. இதன் விளைவாக உலக பணக்காரர் வரிசையில் 3ஆம் இடத்தில் இருந்த தொழிலதிபர் அதானி 8வது இடத்திற்கு தள்ளப்பட்டார்.

குறிப்பாக ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனத்தின் அறிக்கையை தொடர்ந்து அதானி குழும பங்குகள் இதுவரை 5.57 லட்சம் கோடி ரூபாய் இழப்பைச் சந்தித்துள்ளன என்று தகவல் வெளியாகியுள்ளது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

“தமிழ் ஐசியூ-ல இருக்கு .. உங்கள கெஞ்சி கேக்குறேன்” செல்வராகனின் உருக்கமான வீடியோ.!

சென்னை : இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது முக்கிய அறிவுரைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில்,…

12 hours ago

குழந்தைகள் ஆபாச பட விவகாரம்.! உயர்நீதிமன்றத்திற்கு ‘குட்டு’ வைத்த உச்சநீதிமன்றம்.!

டெல்லி : சென்னை காவல் நிலையத்தில் ஓர் இளைஞர் தனது போனில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வைத்திருந்ததாக கூறி…

12 hours ago

புரட்டாசி மாதம் பெருமாளுக்கு தளிகை போட காரணம் என்ன தெரியுமா?.

சென்னை -தளிகை என்றால் என்ன ,பெருமாளுக்கு தளிகை எவ்வாறு வைப்பது என்பதை பற்றி இந்த ஆன்மீகக் குறிப்பில் அறிந்து கொள்ளலாம்.…

12 hours ago

ஐபிஎல் 2025 : இந்த 5 வீரர்களை தக்க வைத்த சிஎஸ்கே! வெளியான தகவல்!

சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர்…

12 hours ago

ஆணாதிக்கத்தை சமூக நையாண்டியுடன் பேசும் ‘லாப்பத்தா லேடீஸ்’.!

சென்னை : 2025 ஆஸ்கரில் 'சிறந்த வெளிநாட்டு படங்கள்' பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக, இயக்குநர் கிரண்…

13 hours ago

மக்களே! தமிழகத்தில் (24.09.2024) செவ்வாய்க்கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 24.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…

13 hours ago