பாலிவுட் நடிகர் சோனு சூட் மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு 10 ஆக்சிஜன் சிலிண்டர்களை வழங்கியுள்ளார்.
கடந்த ஆண்டு,கொரோனா தொற்று பரவ தொடங்கியதிலிருந்து மக்களுக்கு தேவையான பல்வேறு உதவிகளை பாலிவுட் நடிகர் சோனு சூட் செய்து வருகிறார்.அதுமட்டுமல்லாமல்,ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவி செய்வது,விவசாயிகளுக்கு காளைகள் வாங்கித் தருவது,வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்ப விமான டிக்கெட் எடுத்து கொடுத்தது என மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார் நடிகர் சோனு சூட்.
நாடு முழுவதும் கொரோனா 2வது அலை மிக தீவிரமாக பரவி வருகிறது.இந்த நிலையில்,மத்திய பிரதேச மாநிலம் இந்தூரின் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கொரோனா நோயாளிகள் ஆக்சிஜன் பற்றாக்குறையால் தவித்து வந்தனர்.இதனை கேள்விப்பட்ட நடிகர் சோனு சூட்,அரசு மருத்துவமனைக்கு 10 ஆக்சிஜன் சிலிண்டர்களை வழங்கியுள்ளார்.
மேலும்,கொரோனா போன்ற பேரிடர் காலத்தில் மக்கள் தயங்காமல் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.
சென்னை : தென்னாப்பிரிக்காவின் இளம் அதிரடி வீரரான டிவால்ட் பிரேவிஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்துள்ளார். சென்னை சூப்பர்…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…
சென்னை : இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கமல், சிம்பு, அசோக் செல்வன், த்ரிஷா, அபிராமி ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள "தக்…
சென்னை : தவெக தலைவர் விஜய், கடந்த மார்ச் மாதம் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்ற இப்தார் நோன்பு…
சென்னை : அதிமுக - பாஜக கூட்டணியை மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா அறிவித்தது தான் அறிவித்தார்.…
திருவள்ளூர் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திருவள்ளூர் மாவட்டத்திற்கு பயணம் மேற்கொண்டு அங்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வில்…