Categories: இந்தியா

3 கோடி ரூபாய் நிவாரண உதவி., சீர் செய்யப்படும் பள்ளிக்கூடம்.! வாரி வழங்கிய மோகன்லால்.!

Published by
மணிகண்டன்

வயநாடு நிலச்சரிவு : கேரளா மாநிலம் வயநாடு பகுதியில் முண்டகை, சூரல்மலை, மேப்பாடி உள்ளிட்ட பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக இதுவரை 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இன்னும் 200க்கும் மேற்பட்டோரின் நிலை தெரியாத சூழலில் அவர்களை தேடும் பணியில் மீட்புப்படையினர் தீவிரமாக ஈடுப்பட்டு வருகின்றனர்.

நிலச்சரிவில் பாதிக்கப்பட்டுள்ள மக்களை அரசியல் தலைவர்கள் சிலர் நேரில் பார்வையிட்டு நிவாரண உதவிகளை வழங்கி வரும் சூழலில், நடிகர் மோகன்லாலும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று பார்த்து ஆறுதல் கூறினார். மீட்பு பணிகளையும் பார்வையிட்டார்.

ராணுவத்தில், கௌரவ லெப்டினன்ட் கர்னலாக உள்ள நடிகர் மோகன்லால் இன்று அவருக்கான ராணுவ உடையில் முண்டக்கை பகுதியில் மீட்பு பணிகளை ராணுவ வீரர்களுடன் ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வு முடிந்த பிறகு அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்த சம்பவத்தின் துயரம் பற்றி நாம் நேரில் அந்த இடத்திற்கு சென்று பார்க்கும்போதுதான் தெரிகிறது. நிலச்சரிவு பாதிப்புகள் இன்னும் உள்ளது. சேறும் சகதியுமாக இன்னும் பல மக்கள் உள்ளே சிக்கியிருக்கிறார்கள் என்று தெரிகிறது.

இந்த மீட்பு பணியில் அயராது உழைக்கும் அனைவருக்கும் என் இதயத்திலிருந்து நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இந்தியா இதுவரை கண்டிராத மிகப்பெரிய துயரங்களில் இதுவும் ஒன்றாகும். இந்த நிலச்சரிவில் நாங்கள் இழந்ததை மீண்டும் பெற முடியாது. ஆனால் அவர்களின் எதிர்காலத்திற்கு நம்மால் உதவ முடியும் என்பதை இந்த சமயத்தில் செய்தாக வேண்டும். சவால்களை எதிர்கொண்டாலும், நாங்கள் எப்போதும் வலுவாக இருக்கிறோம். இந்த இக்கட்டான நேரத்தில் அனைவரும் ஒற்றுமையாக இருந்து நமது பலத்தை காட்ட வேண்டும். என்று மோகன்லால் தெரிவித்தார்.

மேலும், தனது விஷ்ணுசாந்தி அறக்கட்டளை சார்பில் 3 கோடி ரூபாய் நிவாரண உதவிகளை செய்ய உள்ளதாகவும் , முண்டகை பகுதியில் சேதமடைந்த பள்ளியை சீரமைத்து தருவதாகவும் நடிகர் மோகன்லால் கூறியுள்ளார். அதனை அடுத்து, மேப்பாடி ராணுவ முகாம் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்பு பணிகள் குறித்தும் லெப்டினன்ட் கர்னல் மோகன்லால் ஆய்வு மேற்கொண்டார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…

11 hours ago

பாஸ்போர்ட் அப்ளை செய்ய போறீங்களா.? அடுத்த 3 நாட்கள் முடியவே முடியாது.!

மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…

11 hours ago

INDvsBAN : “அவர் ரொம்ப உதவி பண்ணாரு”! சதம் விளாசிய பின் அஸ்வின் பேச்சு!

சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…

11 hours ago

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்! தங்கலான் முதல் வாழ வரை!

சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…

12 hours ago

‘இட்லி கடை’ போட்ட தனுஷ்.! மீண்டும் கேங்ஸ்டர் படமா?

சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…

12 hours ago

INDvBAN : சம்பவம் செய்து வரும் அஸ்வின்-ஜடேஜா! வலுவான நிலையில் இந்தியா!

சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…

12 hours ago