கொரோனா உறுதி செய்யப்பட்ட நடிகர் திலீப் குமாரின் சகோதரர் காலமானார்.!

இந்தி சினிமா ஜாம்பவான் நடிகர் திலீப் குமாரின் சகோதரர்கள் எஹ்சன் கான் மற்றும் அஸ்லம் கான் ஆகியோருக்கு சமீபத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் பாசிட்டிவ் என முடிவு வந்தது. இதன் பின்னர், அஸ்லம் மற்றும் எஹ்சன் கான் இருவரும் மூச்சுத் திணறல் ஏற்பட்டது.
இதனால், அவர்களை மருத்துவமனையில் சேர்க்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தினர், இதையடுத்து மும்பையில் உள்ள லிலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வென்டிலேட்டர் மூலம் சிகிக்சை பெற்று வந்தனர்.
எஹ்சன் கானுக்கு 90 வயது, அஸ்லம் கான் அவரை விட சில வயது இளையவர். கடந்த ஞாயிற்றுக்கிழமை திலீப் குமாரின் மனைவி சைரா பானுக்கு கொரோனோ உறுதி செய்யப்பட்ட உடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் மருத்துவமனையில் அனுமத்திக்கப்பட்ட அஸ்லம் கானின் உடல் நிலை மோசமாக உள்ளது என்ற செய்தி வெளியானது.
அஸ்லம் கானுக்கு நீரிழிவு நோய், உயர் இரத்த அழுத்தம் மற்றும் இஸ்கிமிக் இதய நோய் இருந்தது, இதையடுத்து, இன்று காலை அஸ்லம் கான் காலமானார்.