பிரதமர் மோடிக்கு ருத்ராட்ச மணிகளை பரிசாக வழங்கிய நடிகர் அனுபம் கெர்!

Default Image

இந்திய திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் அனுபம் கெர் அவர்கள் பிரதமர் நரேந்திர மோடியை நேற்று சந்தித்துள்ளார். அப்பொழுது பிரதமருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். மேலும் பிரதமரை சந்தித்த பொழுது அவர் பிரதமருக்கு ருத்ராட்ச மணிகளை பரிசாக வழங்கியுள்ளார்.

இதுதொடர்பான புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள அனுபம் கெர் , மதிப்பிற்குரிய பிரதமர் நரேந்திர மோடி அவர்களை இன்று சந்தித்ததில் மிகவும் மகிழ்ச்சி. நாட்டுக்காகவும் நாட்டு மக்களுக்காகவும் நீங்கள் இரவும் பகலும் உழைத்து கொண்டிருக்கும், கடின உழைப்பிற்கும் நான் நன்றி சொல்ல ஒரு வாய்ப்பு கிடைத்தது. மேலும் என் அம்மா அனுப்பிய ருத்ராட்ச மாலையை நீங்கள் ஏற்றுக் கொண்டது எப்பொழுதும் நினைவில் வைத்திருப்பேன்.

கடவுள் ஆசிர்வாதம் எப்பொழுதும் உங்களுக்கு உதவி புரியட்டும். இதுபோல் அனைவருக்கும் ஆற்றலை கொடுத்து கொண்டே இருங்கள். ஜெய்ஹிந்த் என தெரிவித்துள்ளார். மேலும் இந்த பதிவிற்கு பதில் அளித்துள்ள பிரதமர், மிக்க நன்றி அனுபம் கெர், உங்கள் மதிப்பிற்குரிய அம்மா மற்றும் நாட்டு மக்களின் ஆசீர்வாதமே இந்தியாவிற்கு சேவை செய்ய தொடர்ந்து என்னை ஊக்கப்படுத்துகிறது என தெரிவித்துள்ளார்.  இதோ அந்த பதிவு,

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்