3 இடங்களில் அதிரடி சோதனை.! போலீசாரிடம் சிக்கிய 1580 கிலோ செம்மர கட்டைகள்.!

பெங்களுருவில் போலீசார் நடத்திய சோதனையில் 1,580 கிலோ செம்மர சந்தனக்கட்டைகளை பறிமுதல் செய்தனர்.

பெங்களுருவில் மஹாலக்ஷ்மி லே அவுட் போலீசார், 3 இடங்களில் சோதனை நடத்தினர். அப்போது சோதனையின் முடிவில் 1,580 கிலோ செம்மர சந்தனக்கட்டைகளை பறிமுதல் செய்ததாக போலீசார் தெரிவித்தனர். மேலும், சந்தேகத்தின் அடிப்படையில் 5 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருவதாகவும் போலீசார் கூறினர்.

ஏற்கனவே பெங்களூரு போலீஸ் கடந்த மாதம் ஒரு கும்பலிடம் 730 கிலோ சந்தனக்கட்டைகள் மற்றும் 147 லிட்டர் சந்தன எண்ணெய் மீட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்