தங்களை எப்படியும் பிரித்து விடுவார்கள் என்பதால் தோழிகள் இருவரும் சேர்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு பெண்ணுக்கு ஆண் மீதும் ஆணுக்கு பெண் மீதும் காதல் அல்லது அன்பு ஏற்படும் என்பது தான் இயற்கை விதி. ஆனால் தற்போதைய காலங்களில் பெண்கள் பெண்கள் மீதும், ஆண்கள் ஆண்கள் மீதும் என்று ஒரே பாலினத்தவர் காதலிக்கின்றனர், அதிக அளவில் நேசிக்கின்றனர். சில இடங்களில் பெண் தோழிகள் மிக அதிக அளவில் தங்கள் தோழிகளுடன் அன்பை பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில் கேரளாவில் உள்ள கல்லூரியில் ஒன்றாக பயின்று வரக்கூடிய அமிர்தா ஆர்யா ஆகிய 21 வயதுடைய இரண்டு பேரும் மிக நெருங்கிய தோழிகள். இருவரும் இணைபிரியாமல் எப்பொழுதும் எங்கு சென்றாலும் ஒன்றாகவே இருப்பார்கள். இந்நிலையில், அமிர்தாவுக்கு திருமண ஏற்பாடு அவரது குடும்பத்தினரால் செய்யப்பட்டுள்ளது. எனவே தனது தோழி ஆர்யாவை விட்டுப் பிரிய வேண்டிய நிலை ஏற்படுமே என்ற மன வருத்தத்தில் இருந்த அமிர்தா தனது குடும்பத்தினரிடம் தனக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை என்று கூறியுள்ளார். ஆனால் பெண் தோழி தானே ஏன் இப்படி கூறுகிறார் என குடும்பத்தினர் அதை அலட்சியமாக எண்ணியுள்ளனர்.
இந்நிலையில் ஆர்யாவிடமும் இந்த திருமண காரியத்தைக் குறித்து அமிர்தா கூற இருவரையும் எப்படியும் திருமணம் செய்து வைத்து, பிரித்து விடுவார்கள் என்ற பயத்தில் அமிர்தாவும் ஆர்யாவும் சேர்ந்து தீபாவளிக்கு முன்பதாக ஒன்றாக சந்தோஷமாக இருந்தனர். அதன்பின் இருவரும் வெளியில் சென்று வருவதாக வீட்டில் கூறிச் சென்றுள்ளனர். ஆனால் அன்று இரவு ஏழு மணி ஆகியும் இருவரும் வீட்டுக்கு வராததால் குடும்பத்தினர் அவர்களை தேட ஆரம்பித்துள்ளனர். அன்று இரவு 7 மணி அளவிலே இவர்கள் இருவரும் மூவாற்றுப்புழா ஆற்றுக்கு சென்று அங்கு உள்ள பாலத்தில் நின்று கை கோர்த்து ஆற்றில் குதித்து உயிர் இழந்துள்ளனர். புகாரை தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் இருவரது உடலையும் நேற்று முன்தினம் தான் பூச்சக்கள் காயலில் கிடந்து மீட்டுள்ளனர். மேலும் இதுகுறித்து தற்போது விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சென்னை : சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள டிடி நெக்ஸ்ட் லெவல், சூரியின் மாமன், யோகிபாபுவின் ஜோரா கைய தட்டுங்க ஆகிய…
டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் மோதல் காரணமாக ஒரு வார காலம் ஐபிஎல் போட்டிகள் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், மே 17 முதல் மீண்டும்…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…
பெங்களூரு : இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக பாதியில் நிறுத்தப்பட்ட 18-ஆவது ஐ.பி.எல் சீசன் ஒரு வார…
சென்னை : வடக்குப்பட்டி ராமசாமி எனும் ஹிட் படத்தை கொடுத்த சந்தானம் அடுத்ததாக டிடி நெக்ஸ்ட் லெவல் எனும் திரைப்படத்தில் நடித்து…
சென்னை : இந்திய டெஸ்ட் கேப்டன் ரோஹித் சர்மா ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து விராட் கோலியும் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு…