நாடாளுமன்ற மக்களவையில் துணை சபாநாயகர் ராமதேவி குறித்து அவதூராக பேசிய சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த ஆசம்கான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜக பெண் எம்.பி க்கள் வலியுறுத்தியுள்ளனர்.
நாடாளுமன்ற அவையில் நேற்று நடைபெற்ற முத்தலாக் தடுப்பு மசோதா மீதான விவாதத்தில் சபாநாயகர் இருக்கையில் அமர்ந்து அவையை வழிநடத்தினார். அப்போது, பேசிய ஆசம்கான் ராமதேவி குறித்து ஆட்சேபத்திற்கு உரிய கருத்தை கூறியுள்ளார். இந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக எம்.பி க்கள் பலரும் கூச்சலிட்டனர். ஆசம்கான் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறி தொடர்ந்து வலியுறுத்தினர்.
இந்நிலையில்,இன்று அவை கூடியதும் ஆசம்கான் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக சபாநாயகர் ஓம் பிர்லா கருத்து கேட்டார். அப்போது பேசிய பாஜக மத்திய அமைச்சர்களான நிர்மலா சீத்தாராமன் மற்றும் ஸ்மிருதி ராணி ஆகியோர் ஆசம்கான் கூறிய கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும், இனிமேல் இதுபோன்று அவதூறாக எந்த உறுப்பினரும் பேசாத வகையில் ஆஸம்கான் அவருக்கு தண்டனை வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர். அதே போல், மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை : நெல்லை கங்கைகொண்டானில் டாடா குழும நிறுவனத்தின் சூரிய மின்கல உற்பத்தி ஆலையை திறந்து வைப்பதற்காக இன்று முதலமைச்சர்…
மகாராஷ்டிரா : இங்கிலாந்து மற்றும் இந்தியா ஆகிய இரண்டு அணிகளும் மோதிக்கொள்ளும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட்…
சென்னை : வழக்கமாக அஜித் படங்கள் என்றாலே அவருக்கென தனி மாஸான ஓப்பனிங் பாடல் இருக்கும். மாஸ் வசனங்களுடன் அவருடைய அறிமுக…
மகாராஷ்டிரா : இந்தியா – இங்கிலாந்து ஆகிய அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரின் முதல்…
அஜித் நடிப்பில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள விடாமுயற்சி திரைப்படம் மக்களுக்கு மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், பலரும்…
டெல்லி : யூனிவர்சிட்டி கிராண்ட்ஸ் கமிஷன் (UGC) சமீபத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிப்பதற்கான தேடுதல் குழுவின் அமைப்பில் மாற்றங்களை அறிவித்திருந்தது. அறிவிக்கப்பட்ட…