Air India Cockpit [Representational]
டெல்லி-லே செல்லும் ஏர் இந்தியா விமானத்தின் காக்பிட்டுக்குள் ஒரு பெண்ணை அழைத்து வந்ததற்காக இரண்டு விமானிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் இருந்து லே செல்லும் எஐ-445 விமானத்தின் கட்டுப்பாடு அறைக்குள் (காக்பிட்) அனுமதியின்றி பெண் நண்பர் ஒருவரை விமானிகள் அழைத்து வந்துள்ளனர். இதனையடுத்து கட்டுப்பாடு அறைக்குள் பெண் பயணி அனுமதி இன்றி வந்தது தொடர்பாக, கேபின் குழுவினர் நிறுவனத்திடம் புகார் அளித்துள்ளனர்.
இதனையடுத்து விமானம் உடனடியாக தரையிறக்கப்பட்டு இரு விமானிகள் மீதும் ஏர் இந்தியா நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த சம்பவம் குறித்து பதில் அளித்த சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் (டிஜிசிஏ), இந்த விவகாரம் குறித்து அறிந்திருப்பதாகவும், இதற்கு முறைப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
இதற்கு ஏர் இந்தியா தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ பதில் எதுவும் வரவில்லை. ஆனால், விரிவான விசாரணைக்காக ஏர் இந்தியா ஒரு குழுவை அமைத்துள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்தில், துபாயிலிருந்து டெல்லி செல்லும் ஏர் இந்தியா விமானத்தின் காக்பிட்டிற்குள் தனது பெண் நண்பரை அழைத்து வந்த ஏர் இந்தியா விமானியின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
லக்னோ : ஐபிஎல் 2025 இன் 61வது போட்டி இன்று லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு…
டெல்லி : கொரோனா தொற்று மீண்டும் உலகம் முழுவதும், குறிப்பாக, தென்கிழக்காசியாவில் வேகமாக பரவுகிறது. கொரோனா வைரஸின் ஒமைக்ரான் வேரியன்ட்களில்…
லக்னோ : ஐபிஎல்லில் இன்றைய லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. லக்னோ…
சென்னை : யோகி டா பட இசை வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குநர் ஆர்.வி.உதயகுமார், விஷால் - சாய் தன்ஷிகா…
சென்னை : நடிகர் விஷால் நடிகை சாய் தன்ஷிகாவை ஆகஸ்ட் மாதத்தில் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. விஷாலும்…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு திங்களன்று நடந்த இந்தியா-பாகிஸ்தான் இராணுவ மோதல் குறித்து வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி…