Categories: இந்தியா

சுதந்திரமாக செயல்படுகிறோம்… சீன பிரச்சாரத்தை நாங்கள் பரப்பவில்லை.! நியூஸ் கிளிக் விளக்கம்.!

Published by
மணிகண்டன்

டெல்லியில் நியூஸ் கிளிக் செய்தி நிறுவனத்தின் மீது, வெளிநாட்டில் இருந்து சட்டவிரோதமாக நிதியுதவி பெற்றதாக அமலாக்கத்துறை வழக்கு பதிந்து வைத்து இருந்தது. அந்நிறுவனம் கடந்த 3 ஆண்டுகளில் 38 கோடி ரூபாய் வரையில் வெளிநாட்டில் இருந்து சட்ட விரோதமாக பெற்றதாக கூறி அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து இருந்தது.

இந்த வழக்கின் கீழ், டெல்லி சிறப்பு காவல் பிரிவினர், சட்டவிரோத செயல் தடுப்பு நடவடிக்கையின் கீழ் டெல்லி நியூஸ் கிளிக் அலுவலகத்தில் சோதனை மேற்கொண்டனர். இதனை தொடர்ந்து அங்குள்ள ஆதாரங்கள் பாதிக்கப்பட கூடாது என்ற நோக்கில் நியூஸ் கிளிக் அலுவலகத்திற்கு டெல்லி காவல்துறையினர் சீல் வைத்தனர்.

இந்த சோதனையை தொடர்ந்து நியூஸ் கிளிக் தலைமை செய்தி அதிகாரி பிரபீர் புர்கயாஷ்டா, மனித வள மேம்பாட்டு அதிகாரி அமித் சக்கரவர்த்தி ஆகியோர் கைது செய்யப்பட்டு டெல்லி போலீசாரின் விசாரணையில் உள்ளனர்.

இந்நிலையில் நியூஸ் கிளிக் நிறுவனம் இன்று நடந்த சோதனை குறித்து தனது எக்ஸ் சமூக வலைத்தளத்தில் பதிவிடுகையில், நியூஸ்க்ளிக் ஒரு சுதந்திரமான செய்தி இணையதளம். எங்கள் பத்திரிகை தொழிலின் நோக்கம் உயர்ந்த தரத்தை அடிப்படையாகக் கொண்டது. நியூஸ்க்ளிக் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ எந்தவொரு சீன நிறுவனம் அல்லது அதிகாரத்தின் உத்தரவின் பேரில் எந்த செய்தியையும் அல்லது தகவலையும் வெளியிடாது.

சீனப் பிரச்சாரத்தை எங்கள் இணையதளத்தில் பரப்புவதில்லை. நாங்கள் எங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்ட உள்ளடக்கம் தொடர்பாக நெவில் ராய் சிங்கமிடமிருந்து வழிகாட்டுதல்களைப் பெறவில்லை. நியூஸ்க்ளிக் மூலம் பெறப்பட்ட அனைத்து நிதியும் பொருத்தமான வங்கி வழிகள் மூலம் பெறப்பட்டு, டெல்லி உயர்நீதிமன்றத்தில் இந்திய ரிசர்வ் வங்கியால் நிரூபிக்கப்பட்டபடி, சட்டப்படி தேவைப்படும் அதிகாரிகளுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று விளக்கம் அளித்துள்ளது.

Published by
மணிகண்டன்
Tags: #NewsClick

Recent Posts

மூடநம்பிக்கையை ஒழிக்க சிறப்பு சட்டம் கொண்டுவரப்படுமா? அமைச்சர் ரகுபதி சொன்ன பதில்!

சென்னை : கடந்த மாதம் 14-ஆம் தேதி  தமிழ்நாடு சட்டப்பேரவையில் பொது பட்ஜெட்டும், 15ம் தேதி வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டது.…

36 minutes ago

கோவை த.வெ.க பூத் கமிட்டி கருத்தரங்கு – விஜய் பங்கேற்பு.!

கோவை : கோவையில் வரும் 26, 27ம் தேதி தவெக தலைவர் விஜய் தலைமையில் பூத் கமிட்டி கூட்டம் நடைபெற…

2 hours ago

குடும்பத்துடன் இந்தியா வந்தடைந்தார் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ்.!!

டெல்லி : அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் மற்றும் அவரது மனைவி உஷா வான்ஸ் ஆகியோர் காலை 10 மணி…

2 hours ago

அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி பலமாக இருப்பதாக திருமாவளவன் சொல்லிவிட்டார்.. – தமிழிசை பேச்சு!

சென்னை : விசிக தலைவர் திருமாவளவன் நேற்று வீடியோ ஒன்றை வெளியிட்டு சில விஷயங்களை பேசியிருந்தார். அதில் " ஒரு…

3 hours ago

live : அரசியல் நிகழ்வுகள் முதல்…பெல்ஜியம் ரேஸிலும் அசத்திய அஜித் குமார் அணி வரை!

சென்னை : தமிழகத்தில் பல்கலைக்கழகங்களின் வேந்தராக (Chancellor) இருக்கும் ஆளுநருக்கு, பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாக்கள் மற்றும் துணைவேந்தர்கள் மாநாடு போன்றவற்றை நடத்துவதற்கு…

3 hours ago

திரும்பி பார்முக்கு வந்த ஹிட் மேன்! ரோஹித் ஷர்மாவை புகழ்ந்து தள்ளிய வீரர்கள்!

மும்பை : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நிலையில்,…

4 hours ago