காதலை ஏற்க மறுத்த திருமணமாகிய பெண்ணிற்கு ஆசீட் வீசி கொலை!

Published by
Rebekal

காதலை ஏற்க மறுத்த திருமணமாகிய பெண்ணிற்கு ஆசீட் வீசப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.

டெல்லியில் உள்ள பாவனா எனும் பகுதியை சேர்ந்த 23 வயதுடைய மோண்டு எனும் இளைஞர் திருமணமான ஒரு பெண்ணை காதலித்துள்ளார். அதன் பின் அந்த பெண்ணிடம் சென்று தான் அவரை விரும்புவதாகவும், இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் எனவும் அடிக்கடி கூறி வந்துள்ளார். இருப்பினும் அந்த பெண் தொடர்ந்து இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார்.

இதனால் கோபமடைந்த அந்த இளைஞர் அப்பெண் மீது ஆசிட் வீசி விட்டு தப்பி ஓடியுள்ளார். இதனை அடுத்து இவர் பீகாரில் உள்ள பக்சர் மாவட்டத்தில் வைத்து போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இருப்பினும் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இரண்டு வாரங்களாக சிகிச்சை பெற்று வந்த பெண், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இது குறித்து போலீஸார் தரப்பில் கூறுகையில், இளைஞர் சம்பவத்தன்று அந்த பெண்ணை வற்புறுத்தி தனது அறைக்கு அழைத்து வந்து இதுகுறித்து கேட்டதாகவும், ஆனால் அவர் தனது கணவரை விட்டுவிட்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால், அப்பெண்ணின் இரு கைகளையும் கட்டி விட்டு அவர் மீது ஆசிட் வீசி விட்டு அங்கிருந்து தப்பியோடி உள்ளார் எனவும் தெரிவித்துள்ளனர்.

Published by
Rebekal

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

2 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

7 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

7 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

7 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

7 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

7 hours ago