காதலை ஏற்க மறுத்த திருமணமாகிய பெண்ணிற்கு ஆசீட் வீசப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.
டெல்லியில் உள்ள பாவனா எனும் பகுதியை சேர்ந்த 23 வயதுடைய மோண்டு எனும் இளைஞர் திருமணமான ஒரு பெண்ணை காதலித்துள்ளார். அதன் பின் அந்த பெண்ணிடம் சென்று தான் அவரை விரும்புவதாகவும், இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் எனவும் அடிக்கடி கூறி வந்துள்ளார். இருப்பினும் அந்த பெண் தொடர்ந்து இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார்.
இதனால் கோபமடைந்த அந்த இளைஞர் அப்பெண் மீது ஆசிட் வீசி விட்டு தப்பி ஓடியுள்ளார். இதனை அடுத்து இவர் பீகாரில் உள்ள பக்சர் மாவட்டத்தில் வைத்து போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இருப்பினும் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இரண்டு வாரங்களாக சிகிச்சை பெற்று வந்த பெண், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இது குறித்து போலீஸார் தரப்பில் கூறுகையில், இளைஞர் சம்பவத்தன்று அந்த பெண்ணை வற்புறுத்தி தனது அறைக்கு அழைத்து வந்து இதுகுறித்து கேட்டதாகவும், ஆனால் அவர் தனது கணவரை விட்டுவிட்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால், அப்பெண்ணின் இரு கைகளையும் கட்டி விட்டு அவர் மீது ஆசிட் வீசி விட்டு அங்கிருந்து தப்பியோடி உள்ளார் எனவும் தெரிவித்துள்ளனர்.
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…