Sabarimalai Ayyappan Temple [File Image]
கார்த்திகை மாதம் பிறந்துவிட்டது. சபரிமலை ஐயப்பன் கோவில் செல்லும் பக்தர்கள் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரிக்க தொடங்கிவிட்டது. கடந்த 17ஆம் தேதி (கார்த்திகை 1) முதல் ஐயப்ப பக்த்ர்கள் விரதம் இருக்க துவங்கி விட்டனர்.
மண்டல் பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் கடந்த 16அம தேதி திறக்கப்பட்டது. 17ஆம் தேதி முதல் பக்த்ர்கள் விரதமிருந்து சபரிமலை யாத்திரையை துவங்கி விட்டனர். 17ஆம் தேதி முதல் நேற்று வரை மட்டுமே சுமார் இரண்டரை லட்சத்திற்கும் அதிகமாக பக்தர்கள் தரிசனம் செய்ய வந்துள்ளனர் என திருவிதாங்கூர் தேவசம்போர்டு தெரிவித்துள்ளது. .
சுவாமியே சரணம் ஐயப்பா.! மண்டல பூஜை.. மகரவிளக்கு பூஜை.. பக்தர்கள் கவனத்திற்கு…
பக்தர்கள் கூட்டம் வழக்கத்தை விட இந்தாண்டு அதிகமாக இருப்பதால் தற்போதே தரிசன நேரத்தை தேவசம்போர்டு அதிகரித்து விட்டது. முன்னர் காலை 5 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும், பின்னர் 4 மணி முதல் 10 மணி வரையும் இருந்த தரிசன நேரம் தற்போது காலை 3 மணி முதல் பகல் 1 மணி மற்றும் மாலை 4 மணி முதல் இரவு 11 மணி என ஒரு நாளைக்கு 16 மணிநேர தரிசனம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வரும் 27ஆம் தேதி மண்டல பூஜை முடிந்து நடை சாத்தப்படும். அடுத்து மகரவிளக்கு தரிசனத்திற்காக 30ஆம் தேதி நடை திறக்கப்படும். 15ஆம் தேதி மகரவிளக்கு தரிசனம் முடிந்து படி பூஜைகள் ஆரம்பிக்கப்படும். பின்னர் 20ஆம் தேதி அனைத்து பூஜைகளும் நிறைவுற்று சபரிமலை ஐயப்பன் கோவில் நடை சாத்தப்படும்.
சென்னை : ஒவ்வொரு நடிகருக்கும் தன்னுடைய சினிமா வாழ்க்கையில் மறக்க முடியாத மிகப்பெரிய ஹிட் படங்களாக ஒரு படம் இருக்கும் என்பது…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஐரோப்பிய ஒன்றியம் (EU) அமெரிக்காவை ஏமாற்றுவதற்காக உருவாக்கப்பட்டது என்று குற்றம்சாட்டியுள்ளார். அதிகமாக,…
லாகூர் : நடந்து கொண்டு இருக்கும் இந்த ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்து இங்கிலாந்து அணி வெளியேறியது ரசிகர்களுக்கும் அணி…
கோவை : ஆண்டுதோறும் மஹா சிவராத்திரி விழா அன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஈஷா யோகா மையத்தில் நடைபெறும்…
லாகூர் : 2025-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இன்றயை போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் லாகூரின் கடாபி மைதானத்தில்…
கோவை : ஈஷா யோகா மையத்தில் இன்று (பிப்ரவரி 26, 2025) மஹா சிவராத்திரி விழா நடைபெற்று வருகிறது. இந்த…