ஆக்ரா-கான்பூர் நெடுஞ்சாலையில் மூடுபனி காரணமாக குறைந்தது 6 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி பெரும் விபத்துக்குள்ளானது.
டெல்லி மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் நிலவும் அடர்த்தியான பனிமூட்டம் காரணமாக சாலைகள் முற்றிலுமாக பனியால் மறைக்கப்பட்டதால் விபத்துகள் பெருமளவில் நடக்கின்றன. இந்நிலையில் உத்திர பிரதேசம் ஆக்ராவிலிருந்து கான்பூர் செல்லும் நெடுஞ்சாலையில் அடர்ந்த மூடுபனி காரணமாக கிட்டத்தட்ட 6 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் சுமார் 50 பயணிகளை ஏற்றிக்கொண்டு எட்டாவாவிலிருந்து மதுராவுக்குச் சென்று கொண்டிருந்த மாநில சாலைப் போக்குவரத்துக் கழகப் பேருந்தும் ஏற்கனவே மோதலில் சிக்கிய டிரெய்லர் டிரக் மீது மோதியுள்ளது. பயணிகளுக்கு சிறுசிறு காயங்கள் ஏற்பட்டுள்ளது.
மாநில அரசின் சுரங்கத் துறையின் அதிகாரிகள் சோதனைக்காக ஒரு லாரியை நிறுத்தியதால் அதன் பின்னால் வந்த வாகனங்கள் அதன் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…