நவம்பர் 1 முதல் முதலாமாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்க அறிவுறுத்தியுள்ளது மத்திய கல்வித்துறை அமைச்சகம்.
கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பள்ளிகள்,கல்லூரிகள் என அனைத்தும் மூடப்பட்டது. செப்டம்பர் 21 ஆம் தேதி முதல் விருப்பத்தின் பேரில் 9 முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்கள் பள்ளிகளுக்கு செல்லலாம் என மத்திய அரசு அறிவித்தது. இந்நிலையில் கல்லூரிகள் & பல்கலைக் கழகங்களுக்கான முதலாண்டு வகுப்புகளை தொடங்குவதற்கான அட்டவணையை மத்திய கல்வித் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 31.10.2020 க்குள் மாணவர் சேர்க்கையை நிறைவு செய்து,01.11.2020 முதல் முதலாமாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தேர்வுக்கு தயாராக அடுத்த ஆண்டு மார்ச் 1-ஆம் தேதி முதல் 7 ஆம் தேதி வரை விடுமுறை ஆகும். செமஸ்டர் தேர்வுகள் மார்ச் 8 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை நடைபெறும்.செமஸ்டர் தேர்வுக்கு பின் மார்ச் 27 ஆம் தேதி முதல் ஏப்ரல் 4-ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படும்.இதன் பின்னர் ஏப்ரல் 5 ஆம் தேதி வகுப்புகள் தொடங்கும். செமஸ்டர் தேர்வுக்கு தயாராக ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி வரை விடுமுறை காலம் இருக்கும்.ஆகஸ்ட் 9-ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரை இரண்டாவது செமஸ்டர் தேர்வு நடைபெறும். ஆகஸ்ட் 22 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரை 2வது செமஸ்டர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த கல்வியாண்டில் கல்லூரி வகுப்புகள் ஆகஸ்ட் 30 ஆம் தேதி முதல் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
துபாய் : சாம்பியன்ஸ் டிராபியில் நாளை நடைபெறவிருக்கும் அரையிறுதி போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. இந்த இரு அணிகளும் நாளை…
சென்னை : வருகின்ற மார்ச் 7ஆம் தேதி தவெக சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. ராயப்பேட்டை ஒய்எம்சிஏ…
சென்னை : கொடுக்கப்படும் பட்ஜெட்டில் எந்த அளவுக்கு தரமான படத்தை கொடுத்து மக்களை கவர்ந்து அந்த படத்தினை தயாரித்த தயாரிப்பாளர்களுக்கு லாபத்தை…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபியின் அரையிறுதிப் போட்டி இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நாளை (மார்ச் 4 ஆம்…
கொல்கத்தா : கடந்த 2024-ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணி வெற்றிபெற்று கோப்பையை வென்றது. ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையில்…
நாகப்பட்டினம் : நாகையில் ரூ.82.99 கோடி மதிப்பிலான 206 புதிய திட்டங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். பல்வேறு துறைகள்…