உத்தரபிரதேசத்தின் பலராம்பூர் மாவட்டத்தை சேர்ந்த அபு யூசுப் என்பவர் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் ஆதரவாளராக செயல்பட்டு வந்ததால் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார். புலனாய்வுப்பிரிவு ஒரு வருடமாக அபு யூசுப் நடவடிக்கைகளை கண்காணித்து வந்துள்ளனர்.
இந்நிலையில், டெல்லியில் நேற்று முன்தினம் இரவில் பைக்கில் சென்ற அபு யூசுப்பை போலீசார் சுற்றி வளைத்தனர். அவரிடம் இருந்து 2 பிரஷர் குக்கர் வெடிகுண்டுகள், துப்பாக்கி, தோட்டாக்களை போலீசார் பறிமுதல் செய்தனர். அபுயூசுப் வைத்திருந்த 2 வெடிகுண்டுகள் முழுவதும் தயார் நிலையில் இருந்தது.
எனவே அவர் டெல்லியில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் நடத்த இருந்த மிகப்பெரிய தாக்குதல் முறியடிக்கப்பட்டு என போலீசார் தெரிவித்தனர். கோரசான் மாகாணத்தில் உள்ள ஐ.எஸ். பயங்கரவாதிகளுடன் இணையம் வழியாக அபு யூசுப் தொடர்பில் இருந்துள்ளார். அபு யூசுப்பின் சொந்த ஊருக்கு அழைத்து சென்று போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, தற்கொலைப்படை ஜாக்கெட் உள்பட வெடிபொருட்களை போலீசார் கைப்பற்றினர். இந்நிலையில், அபுயூசுப் தந்தை கூறுகையில், இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டதற்காக நான் வருந்துகிறேன். அவன் மன்னிக்கப்பட வேண்டும் என நான் விரும்புகிறேன். ஆனால் அவன் செயல் தவறானது என கூறினார். அபுயூசுப் மனைவி கூறுகையில், வீட்டில் துப்பாக்கி வெடிமருந்து சேமித்து வைத்துள்ளார்.
இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என நான் கூறினேன். ஆனால், நான் அவரை தடுக்க கூடாது என கூறி விட்டார். அவர் மன்னிக்கப்பட வேண்டும் என நான் விரும்புகிறேன். எனக்கு நான்கு குழந்தைகள் உள்ளனர். அவர்களை வைத்து கொண்டு நான் எங்கு செல்வேன்..? என கூறினார்.
சென்னை : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடி வருகின்றன. சென்னை…
சென்னை : கத்தோலிக்க சபையின் 266-வது திருத்தந்தையாக 2013 மார்ச் 13 முதல் பதவி வகித்த போப் பிரான்சிஸ் கடந்த…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ்…
சென்னை : இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மாவட்ட…
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று அதிமுக மாவட்ட செயலாளர் ஆலோசனை கூட்டம் சென்னை ராயப்பேட்டையில்…