பெங்களூரில் சுமார் 3,000 கொரோனா நோயாளிகள் காணவில்லை: கர்நாடக அமைச்சர்..!

Published by
murugan

கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட சுமார் 3,000 பேர் பெங்களூரில் இருந்து காணவில்லை என்று கர்நாடக வருவாய் அமைச்சர் ஆர்.அசோகா நேற்று  தெரிவித்தார்.

செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக வருவாய் அமைச்சர் ஆர்.அசோகா,  கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட சுமார் 3,000 பேர் பெங்களூரில் இருந்து காணவில்லை. காணாமல் போனவர்களைக் கண்காணிக்குமாறு காவல்துறையினரை அரசு கேட்டுக் கொண்டுள்ளது. அவர்களில் பலர் மொபைல் போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.

நாங்கள் மக்களுக்கு இலவச மருந்துகளை வழங்குகிறோம். இது 90% பாதிப்புகளை  கட்டுப்படுத்த முடியும். ஆனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் மொபைல் போன்களை சுவிட்ச் ஆப் செய்து விட்டனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் முக்கியமான கட்டத்தில் மருத்துவமனைகளுக்கு வருகின்றனர். இதுதான் இப்போது நடக்கிறது என்று கூறினார்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் செல்போன்களை தொடர்ந்து வைத்திருக்குமாறு கேட்டுக்கொண்டார். பல நோயாளிகள் தங்கள் செல்போன்களை சுவிட்ச் ஆப் செய்வதன் மூலம் அவர்கள் இருக்கும் இடத்தை மறைக்க முயற்சிக்கின்றனர் என்று அவர் கூறினார். பெங்களூரில் குறைந்தது 2,000 முதல் 3,000 பேர் தொலைபேசிகளை அணைத்துவிட்டு வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர். அவர்கள் எங்கு சென்றார்கள் என்பது எங்களுக்குத் தெரியாது என்று கூறினார்.

கர்நாடகாவில் நேற்று 39,047 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 229 பேர் உயிரிழந்துள்ளனர். 39,047 பேரில் 22,596 பேர் பெங்களூரைச் சேர்ந்தவர்கள் ஆவார்.

Published by
murugan

Recent Posts

ENGvsAUS : “போட்டியின் குறுக்கே வந்த கனமழை”! தொடரை கைப்பற்றி ஆஸ்திரேலிய அணி அசத்தல்!

ENGvsAUS : “போட்டியின் குறுக்கே வந்த கனமழை”! தொடரை கைப்பற்றி ஆஸ்திரேலிய அணி அசத்தல்!

பிரிஸ்டல் : இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்று வந்த ஒரு நாள் தொடரின் கடைசி போட்டி இன்று…

5 hours ago

துணை முதல்வர் உதயநிதியின் முதல் நாள்.! பெரியார் திடல் முதல்., கலைஞர் இல்லம் வரை..,

சென்னை : தமிழக அமைச்சரவையில் நேற்று அனைவரும் எதிர்பார்தத பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. குறிப்பாக, திமுகவினர் அதிகம் எதிர்நோக்கி காத்திருந்த…

11 hours ago

செந்தில் பாலாஜி எனும் நான்.., ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவி பிரமாணம்.!

சென்னை : நீண்ட நாட்களாக கூறப்பட்டு வந்த தமிழ்நாடு அமைச்சரவை மாற்றம் குறித்த முக்கிய அறிவிப்பு நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியானது.…

12 hours ago

ஐபிஎல் 2025 : வெளியானது மெகா ஏலம் விதிகள்! உற்சாகத்தில் ரசிகர்கள்!

மும்பை : இந்த ஆண்டின் இறுதியில் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது நடைபெற இருக்கிறது. கடந்த 2 மாதங்களாக…

17 hours ago

தமிழக அமைச்சரவையில் மாற்றம்! துணை முதல்வரானார் உதயநிதி ஸ்டாலின்!

சென்னை : கடந்த சில வாரங்களாகவே தமிழகத்தில், அமைச்சரவை மாற்றம் தொடர்பான விஷயங்கள் தான் பெரிதும் பேசும் பொருளாகவே இருந்து…

1 day ago

ENGvsAUS : “நான் நினைத்தபடி திரும்பி வந்திருக்கிறேன்”! ஜோப்ரா ஆர்ச்சர் நெகிழ்ச்சி பேட்டி..!

லார்ட்ஸ் : இங்கிலாந்து அணியின் முக்கிய தூணாக விளங்கும் வேக பந்து வீச்சாளரான ஜோப்ரா ஆர்ச்சர் கடந்த 2019 உலகக் கோப்பை…

1 day ago