பெங்களூரில் சுமார் 3,000 கொரோனா நோயாளிகள் காணவில்லை: கர்நாடக அமைச்சர்..!

Published by
murugan

கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட சுமார் 3,000 பேர் பெங்களூரில் இருந்து காணவில்லை என்று கர்நாடக வருவாய் அமைச்சர் ஆர்.அசோகா நேற்று  தெரிவித்தார்.

செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக வருவாய் அமைச்சர் ஆர்.அசோகா,  கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட சுமார் 3,000 பேர் பெங்களூரில் இருந்து காணவில்லை. காணாமல் போனவர்களைக் கண்காணிக்குமாறு காவல்துறையினரை அரசு கேட்டுக் கொண்டுள்ளது. அவர்களில் பலர் மொபைல் போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.

நாங்கள் மக்களுக்கு இலவச மருந்துகளை வழங்குகிறோம். இது 90% பாதிப்புகளை  கட்டுப்படுத்த முடியும். ஆனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் மொபைல் போன்களை சுவிட்ச் ஆப் செய்து விட்டனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் முக்கியமான கட்டத்தில் மருத்துவமனைகளுக்கு வருகின்றனர். இதுதான் இப்போது நடக்கிறது என்று கூறினார்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் செல்போன்களை தொடர்ந்து வைத்திருக்குமாறு கேட்டுக்கொண்டார். பல நோயாளிகள் தங்கள் செல்போன்களை சுவிட்ச் ஆப் செய்வதன் மூலம் அவர்கள் இருக்கும் இடத்தை மறைக்க முயற்சிக்கின்றனர் என்று அவர் கூறினார். பெங்களூரில் குறைந்தது 2,000 முதல் 3,000 பேர் தொலைபேசிகளை அணைத்துவிட்டு வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர். அவர்கள் எங்கு சென்றார்கள் என்பது எங்களுக்குத் தெரியாது என்று கூறினார்.

கர்நாடகாவில் நேற்று 39,047 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 229 பேர் உயிரிழந்துள்ளனர். 39,047 பேரில் 22,596 பேர் பெங்களூரைச் சேர்ந்தவர்கள் ஆவார்.

Published by
murugan

Recent Posts

பூமிக்கு திரும்பும் சுனிதா வில்லியம்ஸ் : நாளை விண்ணில் பாய்கிறது எலான் மஸ்கின் க்ரூ டிராகன்!

பூமிக்கு திரும்பும் சுனிதா வில்லியம்ஸ் : நாளை விண்ணில் பாய்கிறது எலான் மஸ்கின் க்ரூ டிராகன்!

வாஷிங்டன் : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த வருடம் ஜூன் மாதம் ஸ்டார்…

6 hours ago

“இதற்காகவே நாங்கள் பெரியாரை கொண்டாடுகிறோம்” நிர்மலா சீதாராமனுக்கு பதில் கொடுத்த விஜய்!

சென்னை : பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு டெல்லி நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த…

8 hours ago

இது எங்க காலம்.! ஐசிசி தரவரிசையில் எகிறி அடிக்கும் இந்திய கிரிக்கெட் வீரர்கள்!

டெல்லி : அண்மையில் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபியை கைப்பற்றிய கொண்டாட்டத்தில் இந்திய அணி வீரர்கள் இருக்கும்…

8 hours ago

30 பேர் சுட்டுக்கொலை! 190 பேர் மீட்பு! மற்றவர்கள் நிலை? பாக். ரயில் கடத்தல் அப்டேட்…

இஸ்லாமாபாத்  : பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவிலிருந்து வடக்கு நகரமான பெஷாவருக்கு சென்று கொண்டிருந்த பயணிகள் ரயிலை நேற்று…

9 hours ago

யாருக்கு அறிவில்லை? அமைச்சர் பி.டி.ஆர் vs அண்ணாமலை வார்த்தை போர்!

சென்னை : தேசிய கல்வி கொள்கையை ஆதரிக்கும் வகையில் உள்ள PM Shri திட்டத்தில் தமிழகத்தை இணைக்க மத்திய அரசு…

10 hours ago

மார்ச் 22-ஐ குறிவைத்து காத்திருக்கும் திமுக! பல்வேறு மாநில ஆளும்கட்சி, எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு!

சென்னை : மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்பட உள்ளதாக திமுக தொடர்ந்து கூறிவருகிறது. இந்த தொகுதி…

11 hours ago