பெங்களூரில் சுமார் 3,000 கொரோனா நோயாளிகள் காணவில்லை: கர்நாடக அமைச்சர்..!

Default Image

கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட சுமார் 3,000 பேர் பெங்களூரில் இருந்து காணவில்லை என்று கர்நாடக வருவாய் அமைச்சர் ஆர்.அசோகா நேற்று  தெரிவித்தார்.

செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக வருவாய் அமைச்சர் ஆர்.அசோகா,  கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட சுமார் 3,000 பேர் பெங்களூரில் இருந்து காணவில்லை. காணாமல் போனவர்களைக் கண்காணிக்குமாறு காவல்துறையினரை அரசு கேட்டுக் கொண்டுள்ளது. அவர்களில் பலர் மொபைல் போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.

நாங்கள் மக்களுக்கு இலவச மருந்துகளை வழங்குகிறோம். இது 90% பாதிப்புகளை  கட்டுப்படுத்த முடியும். ஆனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் மொபைல் போன்களை சுவிட்ச் ஆப் செய்து விட்டனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் முக்கியமான கட்டத்தில் மருத்துவமனைகளுக்கு வருகின்றனர். இதுதான் இப்போது நடக்கிறது என்று கூறினார்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் செல்போன்களை தொடர்ந்து வைத்திருக்குமாறு கேட்டுக்கொண்டார். பல நோயாளிகள் தங்கள் செல்போன்களை சுவிட்ச் ஆப் செய்வதன் மூலம் அவர்கள் இருக்கும் இடத்தை மறைக்க முயற்சிக்கின்றனர் என்று அவர் கூறினார். பெங்களூரில் குறைந்தது 2,000 முதல் 3,000 பேர் தொலைபேசிகளை அணைத்துவிட்டு வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர். அவர்கள் எங்கு சென்றார்கள் என்பது எங்களுக்குத் தெரியாது என்று கூறினார்.

கர்நாடகாவில் நேற்று 39,047 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 229 பேர் உயிரிழந்துள்ளனர். 39,047 பேரில் 22,596 பேர் பெங்களூரைச் சேர்ந்தவர்கள் ஆவார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்