டெல்லி: மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியான பின்பு சில குறிப்பிட்ட அரசியல் மாற்றங்கள் நிகழும் என எதிர்பார்த்தது போலவே, தற்போது காங்கிரஸ் – ஆம் ஆத்மி கட்சிகளுடைய மிக முக்கிய மாற்றம் நிகழ்ந்துள்ளது.
மக்களவை தேர்தல் முடிவுகளில் டெல்லியில் உள்ள 7 தொகுதியிலும் பாஜக வெற்றிபெற்றது. ஆனால், I.N.D.I.A கூட்டணி சார்பாக காங்கிரஸ், ஆம் ஆத்மி ஒன்றிணைந்து போட்டியிட்டும் ஒரு தொகுதி கூட வெல்ல முடியவில்லை. இந்த விவகாரம் கூட்டணிக்குள் விரிசலை ஏற்படுத்தி உள்ளது.
ஆம் ஆத்மி மூத்த தலைவரும், டெல்லி மாநில அமைச்சருமான கோபால் ராய் நேற்று கூறுகையில், வரும் 2025 பிப்ரவரி மாதம் நடைபெறும்டெல்லி மாநில சட்டப்பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி தனித்து களம் காணும் என்றும், மக்களவை தேர்தலுக்காகவே I.N.D.I.A கூட்டணியில் இருந்ததாகவும் குறிப்பிட்டு இருந்தார்.
கோபால் ராயின் இந்த செய்திகுறிப்பு குறித்து பாஜக தலைவர் ஷேஜாத் பூனவல்லா கூறுகையில், ‘ டெல்லியில் 7 தொகுதியில் ஒரு தொகுதியில் கூட I.N.D.I.A கூட்டணி வெல்லாத பிறகு, காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி இருக்காது என்று ஆம் ஆத்மி அமைச்சர் கோபால் ராய் கூறியுள்ளார்.
சட்டமன்ற தேர்தலில் கட்சியும் ஆம் ஆத்மி தனித்து களம் காண்கிறது. இது சுயநல நட்பு மட்டுமே. இனி டெல்லியிலும் ஒருவரை ஒருவர் வசைபாடுவர்கள். இதுதான் I.N.D.I.A கூட்டணியின் உண்மையான முகம் என ஷேஜாத் பூனவல்லா கூறியுள்ளார் .
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஏற்கனவே நடைபெற்ற முதல் போட்டியை…
சென்னை : தமிழ் சினிமாவில் தரமான படங்களை கொடுத்து அடுத்ததாக ஒரு சில தோல்வி படங்களை கொடுத்து அடையாளம் தெரியாத…
டெல்லி : மாநிலத்தில் உள்ள 70 தொகுதிகளுக்கும் கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இந்த…
கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள்…
ஈரோடு : கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்றது. ஆளும் திமுக கட்சியினர் வேட்பாளர் வி.சி.சந்திரகுமாரை எதிர்த்து…
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டி நாளை ( பிப்ரவரி 9) -ஆம் தேதி ஒடிஷா…