டெல்லி சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்று, 3-வது முறையாக ஆட்சி அமைக்க உள்ளது. அதுவும் வருகின்ற 16-ம் தேதி பதவியேற்பு விழா நடைபெறவுள்ளது . இந்த நிலையில் 70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டமன்றத்துக்கு, கடந்த சனிக்கிழமை நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகளை நேற்று காலை முதல் 22 மையங்களில் வாக்கு எண்ணும் பணிகள் நடைபெற்றது. இந்த வாக்கு எண்ணிகையில், தொடக்கத்தில் இருந்தே ஆம் ஆத்மி கட்சி முன்னிலை வகித்து, இறுதியில் 62 தொகுதிகளில் வெற்றி பெற்று மீண்டும் டெல்லி கோட்டையை பிடித்துள்ளது. பாஜக 8 இடங்களில் வென்றுள்ளது. இந்த நிலையில் மெஹ்ராலி தொகுதியில் போட்டியிட்ட ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் நரேஷ் யாதவ், 2-வது முறையாக வெற்றி பெற்றுள்ளார். இவர், நேற்றிரவு ( செவ்வாக்கிழமை) தனது ஆதரவாளர்களுடன் கோவிலுக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பியுள்ளார்.
அப்போது கிஷன்கார்க் பகுதி வழியே அவரது வாகனம் சென்றுகொண்டிருந்த போது, சில மர்மநபர்கள் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இந்த துப்பாக்கிசூட்டில் எம்.எல்.ஏ நரேஷ் யாதவ் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார். அவருடன் வந்த ஆம் அத்மி தொண்டர் அசோக் மான் என்பவர் மீது துப்பாக்கி தோட்டாக்கள் பாய்ந்ததில், அவர் சம்பவயிடத்திலேயே உயிரிழந்தார். மேலும், அவருடன் வந்த மற்றோரு தொண்டருக்கும் காயம் ஏற்பட்டதால், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். டெல்லி எம்.எல்.ஏ-வின் வாகனம் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து கிஷான்கார்க் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பின்னர் தகவலறிந்து வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மும்பை : ஐபிஎல் போட்டிகளில் அதிக கோப்பைகளை வென்ற அணிகள் என்றால் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை அணிகளை சொல்லலாம். இதில்…
குஜராத் : தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி தனது 30வது பிறந்தாளையொட்டி ஜாம் நகரிலிருந்து 140…
சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று முதல்வர் மு.க. ஸ்டாலின் கச்சத்தீவை திரும்பப் பெற ஒன்றிய அரசை வலியுறுத்தி தனித்…
டெல்லி : இன்று ஏப்ரல் 2, 2025, மற்றும் நாளை (ஏப்ரல் 3, 2025) மக்களவையில் வக்பு வாரிய திருத்த சட்ட…
சென்னை : மூன்று நாட்கள் இடைவெளிக்குப் பிறகு, நேற்று சட்டப்பேரவை கூடிய நிலையில், பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை தொடர்பான பட்ஜெட்…
சென்னை : நீலகிரி மாவட்டம் உதகையில் திமுக மாணவர் அணி செயலாளர்கள் மற்றும் துணைச் செயலாளர்களின் ஆலோசனை கூட்டம் தனியார்…