வாக்காளர் அடையாள அட்டையுடன் ‘ஆதார்’ இணைப்பு – மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு!

Published by
Edison

இந்தியாவில் வாக்காளர் அடையாள அட்டையிலும்,தேர்தலிலும் சில முக்கியமான மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என்று தேர்தல் ஆணையம் கோரிக்கை விடுத்து வரும் நிலையில்,வாக்காளர் அடையாள அட்டையுடன்,ஆதார் எண்ணை இணைக்க வகை செய்யும் தேர்தல் சீர்திருத்த மசோதாவுக்கு கடந்த ஆண்டு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருந்தது.

மத்திய அமைச்சரவை கருத்துப்படி,இந்த மசோதா மூலம் ஒருவர் பல வாக்காளர் அடையாள அட்டையை பயன்படுத்துவதை தடுக்க முடியும் என்பதாகும்.ஆனால்,ஆதார் எண் இல்லாதவர்களுக்கு வாக்குரிமை மறுக்கப்படலாம் என்று கூறி ஆபத்தான இந்த தேர்தல் சீர்திருத்த மசோதாவை அனைவரும் எதிர்க்க வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இருப்பினும்,காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைப்பதற்கான “தேர்தல் சட்ட திருத்த மசோதா”  கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மக்களவையில் அவசரமாக தாக்கல் செய்யப்பட்டது. மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூவால் இதனை தாக்கல் செய்திருந்தார்.

இந்நிலையில்,வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான அறிவிப்பினை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதாவது,ஒருவர் பெயர் பல இடங்களில் உள்ள வாக்காளர் பட்டியலில் இடம்பெறுவதை தடுக்க இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.தேர்தல் ஆணைய ஆலோசனை படி தேர்தல் சட்டத்தின் சில முக்கிய அம்சங்கள் அமலுக்கு வருகின்றன.

அதன்படி,வாக்களிப்பதில் பாலின சமத்துவ உரிமை அளிக்கும் பொருட்டு மனைவி என்ற சொல்லுக்கு பதில் துணைவர் என்ற சொல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.இதனால்,ஆண் அல்லது பெண் ராணுவ அலுவலர் வெளியூர் சென்றால்,தொலைதூரத்தில் பணியாற்றினால் அவருக்கு பதில் கணவர் அல்லது மனைவி வாக்களிக்க முடியும்.

மேலும்,18 வயது நிறைவடைந்தவர்கள் ஆண்டுதோறும் 4 முறை தங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க விண்ணப்பிக்கலாம்.அந்த வகையில்,ஜனவரி 1,ஏப்ரல் 1,ஜூலை 1 மற்றும் அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் வாக்காளர் பட்டியலில் புதிய வாக்காளர்களை சேர்க்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recent Posts

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…

13 hours ago

பாஸ்போர்ட் அப்ளை செய்ய போறீங்களா.? அடுத்த 3 நாட்கள் முடியவே முடியாது.!

மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…

13 hours ago

INDvsBAN : “அவர் ரொம்ப உதவி பண்ணாரு”! சதம் விளாசிய பின் அஸ்வின் பேச்சு!

சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…

13 hours ago

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்! தங்கலான் முதல் வாழ வரை!

சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…

13 hours ago

‘இட்லி கடை’ போட்ட தனுஷ்.! மீண்டும் கேங்ஸ்டர் படமா?

சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…

14 hours ago

INDvBAN : சம்பவம் செய்து வரும் அஸ்வின்-ஜடேஜா! வலுவான நிலையில் இந்தியா!

சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…

14 hours ago