Categories: இந்தியா

சனி, ஞாயிறுகளில் மட்டும் கடிக்கும் பாம்புகள்.. 6 முறை கடித்தும் உயிருடன் இருக்கும் இளைஞர்.!

Published by
கெளதம்

உத்தரபிரதேசம் : ஃபதேபூர் மாவட்டத்தில் உள்ள சௌரா கிராமத்தைச் சேர்ந்த 24 வயது இளைஞர் ஒருவரை கடந்த 35 நாட்களில் 6 முறை பாம்பு கடித்துள்ளது. ஒவ்வொரு முறையும் பாம்புகள் அவரை கடிக்கும் போது, ​​அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்று குணமடைந்த பிறகு, அவர் மருத்துவமனையையில் வீடு திரும்புகிறார்.

தனது வீட்டில் பாம்பு கடிப்பதால் அத்தை வீட்டுக்கு சென்றாலும், அங்கும் பாம்பு கடித்ததாக தூபே வேதனை. அதுமட்டுமன்றி பாம்பு கடிக்க வருவதை தான் முன்கூட்டியே உணர்வதாகவும், சனி, ஞாயிறு கிழமைகளில் மட்டுமே தன்னை பாம்பு கடிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

முதல் பாம்பு கடிச் சம்பவம் ஜூன் 2 அன்று அவரது வீட்டில் படுக்கையில் இருந்து எழுந்த பிறகு அரங்கேரியுள்ளது. பின்னர் அவர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. கடந்த ஜூன் 2 முதல் ஜூலை 6 வரை, அந்த இளைஞர் ஆறு முறை பாம்புகளால் தாக்கப்பட்டார் என தெரிய வந்துள்ளது.

மேலும், நான்காவது முறையாக பாம்பு கடித்த பிறகு, அந்த இளைஞர் (துபே) தனது வீட்டை விட்டு வெளியேறி வேறு இடத்தில் தங்கும்படி அறிவுறுத்தப்பட்டார். அதன்படி, அவர் ராதாநகரில் உள்ள தனது அத்தை வீட்டிற்கு சென்றார். ஆனால் அங்கேயும் அவர் ஐந்தாவது முறையாக மீண்டும் பாம்பு கடித்துள்ளது.

உடனே, துபேயின் பெற்றோர் அவரை வீட்டிற்கு அழைத்து வந்தனர். வீட்டுக்கு வந்ததும் நிம்மதி என்று நினைத்தால், ஜூலை 6 ஆம் தேதி, அவர் மீண்டும் தனது வீட்டில் ஒரு பாம்பால் தாக்கப்பட்டார். மேலும் அவரது உடல்நிலை மோசமடைந்தது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இப்பொழுது சிகிச்சை அளிக்கப்பட்டு குணமடைந்துள்ளார், இந்த தகவல் அறிந்த நெட்டிசன்கள் இவர் ஒரு அதிர்ஷ்டசாலி என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Published by
கெளதம்

Recent Posts

கம்பீர் செய்வது நியாயமில்லை., கே.எல்.ராகுலுக்காக சண்டைக்கு செல்லும் முன்னாள் நட்சத்திர வீரர்!

அகமதாபாத் : இந்திய கிரிக்கெட் அணியும், இங்கிலாந்து கிரிக்கெட் அணியும் டி20 தொடர் மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாடி வருகிறது.…

60 minutes ago

AI உச்சி மாநாட்டுக்கு முன் பிரமாண்ட விருந்து…மாக்ரோன், ஜேடி வான்ஸை சந்தித்த பிரதமர் மோடி !

பாரிஸ் : பிரதமர் நரேந்திர மோடி தற்போது மூன்று நாள் பயணமாக பாரிஸிற்கு சென்றுள்ள நிலையில், பாரிஸ் வந்தடைந்த பிரதமர் நரேந்திர…

1 hour ago

கேமிங் பிரியர்களே உங்களுக்கு தான்! Realme P3 Pro -வின் சிறப்பு அம்சங்கள்!

டெல்லி : கேமிங் விளையாடுவதில் அதிகம் ஆர்வம் காட்டுபவர்கள் என்ன போன் வாங்கலாம் என யோசிப்பது உண்டு. அதிலும், தொடர்ச்சியாக ரியல்மீ…

2 hours ago

காங்கிரஸ் கூட்டணியே வேண்டாம்., நாங்கள் தனித்து நிற்கிறோம்! மம்தா அதிரடி முடிவு!

கொல்கத்தா :  தமிழகம் போலவே மேற்கு வங்கத்திலும் அடுத்த ஆண்டு (2026) இடையில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.  இதற்கான…

2 hours ago

கருடனை விட கவிழ்ந்த விடாமுயற்சி! அஜித் படத்திற்கு இந்த நிலைமையா?

சென்னை : விடாமுயற்சி படம் அஜித் ரசிகர்கள் மற்றும் இன்னும் பலருக்கு பிடித்திருந்தாலும் கூட சிலருக்கு பிடிக்கவில்லை என்பதால் கலவையான விமர்சனங்களை…

3 hours ago

INDvENG : டேஞ்சரில் சச்சின் சாதனை! முறியடிப்பாரா ஹிட்மேன் ரோஹித் சர்மா?

அகமதாபாத் : இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரை 2-0 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றிய நிலையில். அடுத்ததாக…

4 hours ago