டெல்லியில் கழிவுநீர் வாய்க்காலில் ஒரு சூட்கேஸில் இறந்த நிலையில் ஒரு பெண்ணின் உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் ஷ்ரத்தா என்ற இளம்பெண்ணை அவரது காதலன் அப்தாப் என்ற இளைஞன் கொடூரமாக கொன்று துண்டு துண்டாக வெட்டிய கொலை சம்பவம் இந்தியாவையே அதிரவைத்தது. இதனை அடுத்தும் ஒரு சில சம்பவங்கள் இதே போல இந்தியாவில் நடந்தன.
தற்போது மீண்டும் டெல்லியில், அதே போல உயிரிழந்த ஒரு பெண்ணின் உடல் சூட்கேசில் கண்டெக்கப்பட்டுள்ளது. டெல்லியின் பஞ்சாபி பாக் பகுதியில் நேற்று (புதன்கிழமை) அடையாளம் தெரியாத பெண்ணின் உடல் சிதைக்கப்பட்ட நிலையில் சூட்கேஸில் கண்டெடுக்கப்பட்டது.
கழிவுநீர் வாய்க்காலில் ஒரு சூட்கேஸ் இருந்துள்ளது. அதிலிருந்து துர்நாற்றம் வீச தொடங்கியதை அடுத்து டெல்லி காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அழைப்பு வந்தது. அதனை தொடர்ந்து டெல்லி போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உள்ளூர் பணியாளர்கள் உதவியுடன் வாய்க்காலில் இருந்து அந்த சூட்கேஸை வெளியே எடுத்தனர்.
தற்போது அந்த பெண் யார், எப்போது கொலை நடந்தது, யார் கொலையாளி என தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…