நொய்டாவில் பெண் ஒருவருக்கு குரங்கு காய்ச்சல் அறிகுறி

Default Image

நொய்டாவில் பெண் ஒருவர் குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறது.

டெல்லியை ஒட்டியுள்ள உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் பெண் ஒருவர் குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படுவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனர்.

இது பற்றி சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், நோயாளி 47 வயதான பெண் என்பதும், அவர் நேற்று(ஜூலை 26) மருத்துவமனையில் அனுமதிக்கபட்டதாகவும், அதன் பிறகு அவரது இரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு சோதனைக்காக லக்னோவுக்கு அனுப்பப்பட்டுள்ளன என்று கூறினர்.

மேலும் நோயாளி தற்போது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். பரிசோதனை முடிவுகள் வந்த பிறகே குரங்கு காய்ச்சலை உறுதி செய்ய முடியும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்